பக்கம்:தேவலோகப் பாரிஜாதம்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138


எளியவனுக்கு ஒரு தேவலோகத்துப் பாரிஜாதப் பூ சொந்தபந்தம் என்கிற உரிமையான உறவு முறையிலே கிடைக்கிறதென்றால் அந்தப் பாக்கியத்துக்குப் பூர்வ ஜென்மப் பந்தமே தான் காரணமாக இருக்கவும் வேணும் ஆஹா நான் கூட பூர்வ ஜென்மத்திலே புண்ணியம் செஞ்சிருக்கத்தான் வேணும்! ஆமா பார்வதி ஆமாம் ... பார்வதி உருகினாள் ; உருகுகிறாள் : "செந்தில் ...மைடியர் மோஸ்ட் செந்தில் ...' புதிய உலகத்தில் மிதந்து, தன்னை மறந்த நிலை யிலே மகிழ்ச்சிக் கண்ணிர் வடித்த பார்வதி, பழைய உலகத்திற்கு மீண்டவுடன் மீண்டும் ரத்தக் கண்ணிர் பெருக்குகிறாள்.