பக்கம்:தேவலோகப் பாரிஜாதம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21


பார்வதியின் அழகான உதடுகளில் ஆதரவானதும் ஆறுதலானதுமான புன்னகை அழகாக இழைகிறது. ரெமிங்க்டன் இயங்கத் தொடங்குகிறது. கொடுக்கப்பட வேண்டிய நிலுவைத் தொகைகளுக் கான கடிதங்கள் தயார், செக்' போட்டு அவரவர் களுக்கு அனுப்பிவிட்டால், கனக்கு தீர்ந்து விடும்; நாணயமும் பிழைக்கும். வெஸ்ட் கோஸ்ட் பேப்பர் கம்பெனியின் பிரதிநிதி ஒருவர்-இளவட்டம், வாட்ட சாட்டமாக, வெள்ளையும் சொள்ளையுமாக, அப்போதுதான் சூயஸ்கால்வாயி லிருந்து சென்னைத் துறைமுகத்தில் வந்து இறங்கின மாதிரி வந்து நின்று, துண்டுச்சீட்டு ஒன்றைஒயிலாக நீட்டினார். நீங்க மிஸ் பார்வதி பி. ஏ. நான் மிஸ்டர். ட மில்மணி!' பார்த்தாள் பார்வதி ! தமிழ்த் திரைப்பட விநியோகத் துறைப் பிரதிநிதி அவர்! - 'ஹெல்லோ, மிஸ் பார் வதி!' ஏறிட்டு விழித்தாள் அவள். என்னவோ கேட்கிறார் ! 'என்ன கேட்கிறீங்க? கேட்பதைத் தமிழிலே கேளுங்களேன், ஐயா' "ஓ! நீங்க பார்வதிதானே?” ஊம்!” "என்னை மறந்திட்டீங்களா?