21
பார்வதியின் அழகான உதடுகளில் ஆதரவானதும் ஆறுதலானதுமான புன்னகை அழகாக இழைகிறது.
ரெமிங்க்டன் இயங்கத் தொடங்குகிறது.
கொடுக்கப்பட வேண்டிய நிலுவைத் தொகைகளுக் கான கடிதங்கள் தயார், செக்' போட்டு அவரவர்
களுக்கு அனுப்பிவிட்டால், கனக்கு தீர்ந்து விடும்; நாணயமும் பிழைக்கும்.
வெஸ்ட் கோஸ்ட் பேப்பர் கம்பெனியின் பிரதிநிதி ஒருவர்-இளவட்டம், வாட்ட சாட்டமாக, வெள்ளையும் சொள்ளையுமாக, அப்போதுதான் சூயஸ்கால்வாயி லிருந்து சென்னைத் துறைமுகத்தில் வந்து இறங்கின மாதிரி வந்து நின்று, துண்டுச்சீட்டு ஒன்றைஒயிலாக நீட்டினார். நீங்க மிஸ் பார்வதி பி. ஏ. நான் மிஸ்டர். ட மில்மணி!'
பார்த்தாள் பார்வதி !
தமிழ்த் திரைப்பட விநியோகத் துறைப் பிரதிநிதி
அவர்! -
'ஹெல்லோ, மிஸ் பார் வதி!'
ஏறிட்டு விழித்தாள் அவள். என்னவோ கேட்கிறார் !
'என்ன கேட்கிறீங்க? கேட்பதைத் தமிழிலே கேளுங்களேன், ஐயா'
"ஓ! நீங்க பார்வதிதானே?”
ஊம்!”
"என்னை மறந்திட்டீங்களா?