பக்கம்:தேவலோகப் பாரிஜாதம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47


அவ்வளவுக்கவ்வளவு சீக்கிரமாய் நாம ரெண்டு பேரும் மனசு தேறி, உடம்பும் தேறி, முன்னைப் போலவே தெம்போட நடமாடத் தொடங்கிப்பிடலாமுங்க !' என்று அம்மா பிரச்சினையக் கிளம்பிய துப்பு பகவானுக்கே அர்ப்பணம். - மழை ஒலமிடுகிறது. பார்வதியின் உள்ளத்தின் உள்ளமும் மீண்டும் ஒலமிடுகிறது. பெண்ணாகப் பிறக்கிறதுக்கு மாதவம் செஞ்சிடவேணும்னு மதிப்பும் மரியாதையும் வச்சுப் பேசப்படுற ஒரு பெண்ணாக நான் நல்லதனமாய்ப் பிறந்திட்ட அந்த ஒரு பாவத்தைத் தவிர. - வேறு எந்தப் பாவத்தையும் செஞ்சறியாதவளாச்சே நான் ? ... புண்ணியம் பண்ணின அப்பா அம்மாவுக்கு இருந் திருந்து துரதிர்ஷ்டம் பிடிச்ச நான் பெண்ணாகப் பிறக்கிறத் துக்குத்தானா, இவங்க ரெண்டு பேரும் தவம் இருந்தாங் களா ? ... ஒரு வேளை நான் இவங்களுக்கு மகளாகப் பிறக்காமல் இருந்திருந்தால், இவங்களுக்கு நெஞ்சுவலிப் பிரச்சனை ஏற்பட்டிருக்கவே ஏற்பட்டிருக்காதோ, என்னமோ ? ... இல்லாட்டி, அப்பாவும் அம்மாவும் ஒரு சந்தர்பத்திலே ரகசிய ஆலோசனை நடத்தின மாதிரி. நான் ஆண் பிள்ளையாகப் பிறந்திருந் தால், இவங்க ரெண்டு பேரும் இப்படி அவதிப்படுற துக்குப் பதிலாக, ஒஹோன்னு ஆனந்தமாய்ச் சுகப்பட்டி ருப்பாங்களோ ? - அவளுக்கும் நெஞ்சில் வலி எடுக்கத் தொடங்கி விட்டது , அந்த வலியை மிகைப்படுத்தி மேன்மைப்படுத்திக் கொள்ளக் கங்கணம் கட்டிக்கொண்ட வன் கணக்கிலே, அவளுடைய மனச்சாட்சியினின்றும் பிசிறு தட்டிய அந்நினைவை நினைத்துப் பார்க்கவும் துணிகிறாள் ; ஒருவேளை, நான் பிறந்த இந்த மண்ணிலேயே நான் செத்து மடிஞ்சிட்டா அப்பறம். என் அப்பாவுக்கும் என் அம்மாவுக்கும் நெஞ்சு வலி என்கிற பிரச்னையும் ஏற்படாமலே போயிடும்தானே? - பார்வதி வீரிட்டாள் ஐயையோ !”