பக்கம்:தேவலோகப் பாரிஜாதம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4& கணங்கள் பேய்க்கணங்களாக ஒடின ! கணக்கு நோட்டுடன் வந்தான் ராமையா. அவளுடைய கணக்குத்தான் அவளுக்குத் தெரியாது ! மற்றக் கணக்கெல்லாம் அத்துப்படி அப்பா பசி இல்லாமலே, பழங்கணக்குப் பார்த்துக் கொண்டிருக்கிறார். அம்மா துரங்கினாள் ; தோசை சாப்பிட்ட மயக்கம். தூங்கி எழுந்ததும், சமையலுக்கு உதவ அழைப்பதாகச் சொன்னாள், சூரிய ஒளிக்கு வழிவிட்டாள். பார்வதி அவள் பெரு மூச்சுவிட நன்றாகவே பழகியிருந்தாள். இல்லாததும் பொல்லாததுமான ஏதேதோ நினைவுகள் படம் எடுத்தன; படம் காட்டின. காலையில் காப்பி நேரத்தில் மயிலாப்பூர் மாப்பிள்ளையைப்பற்றி அப்பா நம்பிக்கையோடு தகவல் சொன்னார். சாயந்தரம், பெண் பார்க்கும் படலம் திரும்பவும் ஏடு விரியப் போகிறது - அவள் தன்னைத் தானே கேலி செய்து கொண்டு, தனக்குத்தானே விரக்தி யோடு சிரித்துக்கொள்கிறாள். சுகமாகவும், சுதந்திரமாக வும், கெளரவத்தோடும் நிம்மதியோடும் சுகப்பட்டு வாழ் வதற்கு இந்த வாழ்க்கைக்குத் தெரியாதோ ? - தெரியவே தெரியாதோ ? இப்படிப்பட்ட சோதனையான வாழ்க்கை முறைக்கு இப்படியொரு போராட்டமான பிறவி முறை தேவைதானா ? - இப்போது அவளுக்குத் தலையும் வலித்தது. படைக்கிறவன்தான் இந்தப் புதிருக்கு விடை சொல்லக் கடமைப்பட்டிருக்கிறான். தாகம் தீர்ந்தாள் பார்வதி.