பக்கம்:தேவலோகப் பாரிஜாதம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49


காதலில் தோற்றதால் தற்கொலை செய்து கொண்ட அனுதாபத்துக்குரிய பைத்தியக்காரியின் புகைப் படத்தை மீண்டும் காண்பித்தது ; தினசரி ஒன்று. வாங்கிக்கினு வீட்டுக்குத் திரும்புறவரையிலும், அப்பாவோட நெஞ்சுவலி எக்குதப்பாக் கூடிப் போயிடா மல் இருந்தால் தேவலாம். தமிழ்ப் படமானால், இம் மாதிரி ஆபத்துச் சமயத்துக்குத் திடுதிப்னு கார் ஒண்னு உதவிக்கு வந்து குதிக்கும் ! நான் அத்தனை அதிர்ஷ்டக் காரியா பாசத்தின் துடிப்பில் அங்கிருந்து ஒட்டம் பிடித்து மருந்துகடை வாசலில் நின்றுவிடவும் துடித்தாள். ஜனங்கள் போய்க்கொண்டும் வந்து கொண்டும் இருந்தார்கள் பனகல் பூங்கா நெருங்கியது. பார்வதி திசைமாறி, திசை திரும்பிப் பாய்ந்து நடந்தாள் !... இது அநியாயம் இல்லையா ? அவளை எதிர்த்துப் பாய்ந்து திரும்பி மடங்கிய நூதனமான பிளஷர்". கார் ஒன்று அவளை முன்னே மறித்துச் சரே லென்று நின்றது. 'ஹெல்லோ பார்வ சி!' என்று, கூவி, முன் ஆசனத் தில் இருந்த மின்னல் கொடியாள் ஒருத்தி அழைத்தாள்.' 'க்வீன்' மேரீஸிலே உன்னோட பி.ஏ, படிச்ச அதே சாட்சாத் மாதங்கியேதான் நான் !' என்றாள். "எங்க அம்மாள் இப்போ பட்டணம் அறிஞ்ச பெரிய சமூக சேவகியாக்கும் ' காரை ஒட்டி வந்த ரம்பையோ, திலோத்தமையோ மேலும் சேதி சொன்னாள். தே-4