இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
84
அந்தக் கடிதம் மூன்றே மூன்று வரிகளிலே இதய ஒலியை எதிரொலித்தது.
'அன்பு பார்வதி ! நான் உங்கள் மீது கொண்ட முதல் காதலே கடைசிக் காதலும் ஆகும். நல்ல வாக்கு தாருங்கள். இந்த அன்புச் செந்திலை இரண்டா வது தேவதாசாக ஆக்கிவிட மாட்டீர்களே ?
- பி. செந்தில்நாதன்
ஊரைப் பார்த்தாள்.
மாம்பழ வாசனையாக சேலம் மணத்தது. தேதியைப் பார்வையிட்டாள். எப்போதோ வந்த கடிதம் அது.
தொண்டைக்குழியிலே வெட்டி வே ரி ன் வாசம் மறையாமல் இருந்தது.