பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

23. கலைமகள்

23

யானது, பெரியது, பொங்குந் தன்மையது, கற்களை உடையது, திரை வீசுவது, மேகம் படிவது, கப்பல்கள் தன்மீது தவழப்பெற்றது. மகரம், மீன், சுறவம் முதலிய கடலுள் வாழ்வன. ஏழ்கடல், பாற்கடல் என்பன கூறப்பட்டுள.

கடலிற் கிடைப்பன:- இப்பி, சங்கு, பவளம், முத்து, பொன், மணி, வயிரம். (ஆறுகளின் சந்திப்பால் அகிற்பிளவு, சந்து, கரியின் மருப்புங் கிடைக்கும்.)

கடல் சார்ந்தவை:- ஓதம், கழி, கானல்.

திரை வர்ணனை:- போர்புரிவன போலவும், மலை போலவும், விண்ணளாவி, இரைந்து, நுரைபெருகிக் கரை பொருதுப் பெருகி வருவன திரைகள்.

கடலொலி:- மண முரசுபோல முழங்கும்.

கானல்:- கானலில் கலைமான்கள் விளையாடும்.

கடற்புறத்துத் தலங்கள்:- தலைப்பு 86 பார்க்க.

கடற்புறத்து மரங்கள்:- தலைப்பு 143 பார்க்க.

21. கலி [55]

கலியின் வன்மையால் நல்லன அழியும்; நல்லொழுக்கம் நிலைத்தல் அரிது; கலை ஞானத்தாலும், கற்றாங்கு எரியோம்பு ஒழுக்கத்தாலும், ஈகைக் குணத்தாலும் கொடிய கலியையும் வென்றுநின்ற பெரியோரும், மறையோரும் தமது காலத்தில் விளங்கினார்கள் என்று ஞானசம்பந்த சுவாமிகள் கூறுகின்றார்.

22. கலை [56]

கலைகள் அறுபத்து நான்கு. சுவாமிகள் காலத்தில் கலையின் மேவு மனத்தார் பலர் இருந்தனர். கலை கற்கின்ற ஒலி ஊர்களில் கிரம்பி இருந்தது. மாதர்களும் கலை கற்று வந்தனர். கலைகள் பொழில்களிற் கற்பிக்கப்படும்.

23. கலைமகள் (சரஸ்வதி) [157]

நாமகள், நாவினாள் என்னும் பெயரினள் கலை மகள். சீகாழியிற் பிரமன் நாமகளொடு ஈசனை வழிபட்டான்.