பக்கம்:தைப்பாவாய்-மொழி, பண்பாடு சார்ந்த கவிதைகள்.pdf/30

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

வ.கோ. சண்முகம்


இருட்டு கஜானா’ப்
பூட்டுகள் தெறிக்க
'கருப்புத் தராசு'களின்
கைகள் முறிந்த
அசையாக் குண்றுகளின்
அடுக்கு களாகப்
பொற்குவை உயர்ந்தப்
பொருளா தார
எழுச்சியே, செழுமையே
அரசியல் சுதந்திர
அடிக்கற் களாகும்!

அதுவே தேவை!
அவசரத் தேவை!
இந்த - இனிய
வெள்ளி வருட
விழாக்களில் எல்லாம்
வேள்வியாய், விதைகளாய்
சுதேச உணர்வையே
தாரக மாக்குவோம்!

(1973)