இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தைப்பாவாய்
37
கோடிக் கோடிப் பணிணெடுத்தே
குரல்கள் வந்து பாடிடினும் - கண்ணே,
ஓடித் தேடித் தென்றலே
ஊமையாகி ஓயுது! - உன்னால்
ஊனும் கனலாய்க் காயுது!
விளக்குத் துப்பும் ஒளிமழையில்
விண்ணும் கூடத் தோயுது! - கண்ணே,
வளர்க்கும் இருளில் ஒருமனையின்
வாசல் மட்டும் புரளுது! - உன்னால்
வாழ்வு மொட்டும் கருகுது!