பக்கம்:தைப்பாவாய்-மொழி, பண்பாடு சார்ந்த கவிதைகள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

வ. கோ. சண்முகம்


'நியாய இலட்சியங்கள்'
என்விசைக் கால்களாகின்றன!

இவைகள் அனைத்தும்
எனது
ஞான சொப்பனங்களில்
பேரதிர்ஷ்டமல்லாவா?

நீ
என் மனநித்திரையை
கிள்ள வரும்போது
உன் முதுகில்தான்
எத்தனை எத்தனைக்
கிழவசந்தங்களால்
கிழிந்து விழுந்த
நினைவுக் கூளங்கள்!

ஆனால்-
அக்கூளக்
குப்பைகள்தானே
கர்ப்பத் தேதிகளில்
மொக்குமுகை விரிக்கப்போகும்
ஜோதித் தோட்டங்களின்
வேர் உரம்!

உன்னால் கூளங்கள்
தூசி தும்பட்டைகள் யாவுங்கூடக்