பக்கம்:தைப்பாவாய்-மொழி, பண்பாடு சார்ந்த கவிதைகள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தைப்பாவாய்

55

விருந்து படைக்கிறாய்!
தருபவள் நீ...!
பெறுபவனி நான்!
இது வேடிக்கைதானே...!

நீ
நீயாகவே வந்து
என்னுள்
நானாகி விடும்போது
நான்
நோயாளி அல்ல!
நொந்தவன் அல்ல!
நொடித்துப் போனவனும் அல்ல!
தூறுமுறை தோற்றவனும் அல்ல!
தூறாயிரம் முறைகள்
வெல்லப் போகும்
வீர வித்தகன்!

என்
சுவாசக் கவிதையே!

என் மர்மப் புன்னகைகளின்
வித்துமுளையே!
நீ,
‘நி’யாகவே
கணங்கள் தோறும்
தார்மீக அருளையே