பக்கம்:தொட்டனைத்தூறும் மணற்கேணி.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிகழ்த்திய சொற்பொழிவு சிந்தாமல் சிதறாமல் அப்படியே இடம் பெற்றுள்ளது. அவர்கள், 'தொட்டனைத்துறும் மணற்கேணி என்னும் தலைப்பில் நிகழ்த்திய சொற்பொழிவு இது. இதனை அப்பெயரிலேயே வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம். பதிவு நாடாவைக் கேட்டு முதலில் இச் சொற் பொழிவைக் கைப்பட எழுதியவர் சட்டமன்றத் துணைச் செயலாளராக இருந்து ஒய்வு பெற்ற பூரீவித்யா உபாசகர் திரு. G.S. அனந்த நாராயணன் ஆவார். பிரதிகளை வரிவரியாகப் படித்தும் நாடாவைக் கேட்டும் வேண்டிய திருத்தங்களை முனைவர் ம.ரா.போ. குருசாமி அவர்களும் ஒய்வு பெற்ற இரயில்வே பொறியாளர் C.P. கெளரிசங்கர் அவர்களும் செய்து உதவினார்கள். இறுதி யாக முனைவர் தெ. ஞானசுந்தரம் அவர்களும் அவசிய மான திருத்தங்கள் செய்து இந்நூல் நல்வடிவம் பெறு மாறு செய்தார்கள். இறைவன் திருவருளும் எங்கள் தந்தையாரின் நல் ஆசியும் இவர்கள் அனைவருக்கும் என்றென்றும் கிடைத்திட இறைவனை வேண்டு கிறோம். இந்நூல் வெளி வருவதற்குத் தூண்டுகோலாக இருந்தது மட்டுமின்றி இனிய அணிந்துரையையும் வரைந்துள்ள திரு. இறையன்பு 1.A.S அவர்கட்கும் இவர்கள் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். -