பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

123 பற்றி மேலே எழுதினோம். இனி ஐந்திணைக் காமத்தில் வரும் வாயில்களையும் நாம் காண வேண்டும். கைக்கிளை, பெருந்திணைக் காமத்தில் வரும் வாயில்கள் ஐந்திணைக் காமத் தலைவர்கள் போலவே மிகச் சிறந்தவராவார். ஐந்திணைக் காமத்தலைவர் எவ்வாறு அன்பு முதலான வற்றாற் சிறந்து விளங்குகின்றனரோ அது போல் இவ்வாயில் களும் சிறந்தவராவார். வாயில்கள் ஆவார் யாவர் என்பதை, தோழி தாயே பார்ப்பான் பாங்கன் பாணர் பாட்டி இளையர் விருந்தினர் கூத்தர் விறலியர் அறிவர் கண்டோர் யாத்த சிறப்பின் வாயில்கள் என்ப (தொல். கற்பியல் - 52) என்னும் நூற்பாவால் உணர்ந்து கொள்ளலாம். மேற்கண்ட நூற்பாவில் தாய் என்றது நற்றாயை. பாட்டி என்றது பண்பாடும் பாணிச்சி அல்லது விறலியைக் குறிக்கும். மேற்கண்ட வாயில்களுள் தோழி தலைமையானவள் என்பதைத் "தோழி உள்ளுறுத்து வாயில் புகுப்பினும் (8) (தொல், கற்பியல்) என்று தோழியை முதலில் வைத்தும் தலைமையாக்கியும் கூறுவதால் உணர்ந்து கொள்ளலாம். வாயில்கள் கூற்று நிகழ்த்தும் முறை - வெளிப்படைக் கூற்று மேற்கூறிய தோழி முதலிய வாயில்கள் எல்லாம் தமக்குத் தலைமக்களாக விளங்கும் தலைவன் தலைவியரிடத்தே நடந்து கொள்ள வேண்டிய பொது இயல்புகளை ஆராய்வோம். வாயிலராயுள்ளோர் தம் தலைமக்களிடத்தே சொற்களைக் கூறுவதானால் சிறந்த தோழி தவிர, ஏனையோரெல்லாம், ஏன் தோழி கூட குறிப்புச் சொல்லைக் கூறாமல் வெளிப் படைச் சொல்லையே கூறவேண்டும் என்பர் தொல்காப்பியர். வாயிற் கிளவி வெளிப்படக் கிளத்தல் தாவின் றுரிய தத்தம் கூற்றே (தொல். பொருளியல் - 45)