பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/380

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

372 தினை ஏழு அகத்திணையியல் முதல் நூற்பாவில் தொல்காப்பியனார் அகத்தினை ஏழு என்று குறிப்பிடுகின்றார். 'கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய் முற்படக் கிளந்த எழுதிணை என்ப" என்பது அவர் காட்டும் நூற்பா. கைக்கிளை என்பது தொடக்கநிலைக் காமமாகவும், ஒருபாற் காமமாகவும் சிறிய காமமாகவும் அமைவது. இக்கைக்கிளையினைப் பெருமையில்லாத தலைமக்கள் உறவு என்பர் இளம்பூரணர். ஐந்திணை காமம் நுகர்தலுக்கு ஏற்ற பருவமுடைய தலைவன் தலைவி என்னும் இருபாலாரிடத்தும் தோன்றும் அளவொத்த காமம். தொல்காப்பியனாரால் மிகவும் செப்ப முடையாத விரிவாகப் பேசப்படுவது இக்காமமே. இக் காமத்தை அவர் மக்கள் நுதலிய அகனைந்தினை, 'அன்பொடு புணர்ந்த ஐந்திணை என்றெல்லாம் சிறப்பித்துக் கூறுகின்றார். இவ்வைந்திணைக் காமத்தின் பகுதியாகிய களவு, கற்பு என்னும் இரண்டும் தலைவன் தலைவி இருவருடைய அன்பின் பெருக்கத்தாலே அமைவதாதலின் இறையனார் அகப்பொருள் ஆசிரியர். 'களவு கற்பெனக் கண்ணிய சண்டையோர் உளநிகழ் அன்பின் உயர்ச்சி மேன' என்று கூறுவர் பெருந்திணை என்பது மிக்க காமமாகவும், காமம் நுகர்தலுக்கு ஏலாத முதியோர் காமமாகவும், பொருந்தாக் காமமாகவும் அமைவது ஐந்தினைப் பொருள்கள் எழுவகைத் திணையுள் கைக்கிளை, பெருந்தினை ஒழிந்த ஐந்திணைக் காமத்தையே தொல்காப்பியனார் விரிவாகப் பேசுகின்றார். ஐந்து திணைகளும் உரிய பொருள்கள் முதல், கரு, உரி என்பதை,