பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/381

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

373 'முதல்கரு உரிப்பொருளென்ற மூன்றே நுவலுங் காலை முறைசிறந் தனவே பாடலுட் பயின்றவை நாடுங்காலை' என்ற நூற்பாவில் நுவல்கின்றார். முதற்பொருள் ஐந்திணைப் பொருள்களல் முதற் பொருள் நிலமும் பொழுதும் என இருவகைப்படும். 'முதலெனப் படுவது நிலம்பொழு திரண்டின் இயல்பென மொழிப இயல்புணர்ந்தோரே' என்பது தொல்காப்பிய நூற்பா. ஐந்தினை - நிலங்கள் ஐந்து திணைகளில் நான்கு மட்டுமே நிலம்பெறும் என்று குறிக்கின்றார். 'நடுவண் ஐந்திணை நடுவணது ஒழியப் படுதிரை வையம் பாத்திய பண்பே' என்ற நூற்பாவும் இதனை உறுதிப்படுத்துகின்றது. நிலங்கள் பற்றிக் குறிக்கும் போது, குறிஞ்சி, முல்லை, மருதம், ! நெய்தல் என்ற நான்கு திணைகள் மட்டுமே நிலம் பெறும் என்பதை "மாயோன் மேய காடுறை உலகமும் சேயோன் மேய மைவரை உலகமும் வேந்தன் மேய தீம்புனல் உலகமும் வருணன் மேய பெருமணல் உலகமும் முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச் சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே! என்னும் பிற நூற்பாவில் நவில்கின்றார். நிலங்கள் பற்றிக் கூறும் இந்நூற்பாவில்தான் திணைகளின் பெயரையும் அறிமுகப்படுத்துகிறார். ஐந்தில் நான்கு மட்டுமே நிலம் பெறுவனவாதலின் நான்கு திணைகளின் பெயரை ஈண்டுக் கூறினாரெனில் ஏனைய ஒரு திணையின் பெயர் யாது?