பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/450

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

441 ஒருவகை பள்ளி யொற்றி யொருகை முடியொடு கடகர் சேர்த்தி நெடிதுநினைத்து பகைவர்ச் சுட்டிய படைகொல் நோன்விரல் நகைதாழ் கண்ணி நல்வலத் திருத்தி அரசிருந்து பனிக்கும் முரசு முழங்கு பாசறை -யில் இன்துயில் வதிகின்றமையைக் காட்டுகின்றார். இவ்வாறாக முல்லைப்பாட்டு ஆசிரியர் நப்பூதனார் பகைமேற் சென்ற வேந்தனின் பாசறை நிலையைக் கூறு வதன் மூலம் முல்லைத்திணைக்கு இயைந்த வஞ்சி யொழுக்கத்தை விளக்குகின்றார். படர்மெலிந்து இரங்கும் தலைமகள் பெருமுது பெண்டிர் விரிச்சி கேட்டுவந்து ஆற்று விக்கவும் ஆற்றமாட்டாதவளாய்ப் பூப்போலுண்கண் புலம்பு முத்துறைக்க நின்ற தலைமகள் அரசிருந்து பணிக்கும் முரசு முழங்கு பாசறையில் இன்துயில் வதியுநனைக் காணாது வருந்துகின்ற முல்லை யொழுக்கத்தை மீண்டும் இறுதியில் வற்புறுத்துகின்றார் ஆசிரியர் உருமிடி வானம் இழியவும், வரிநிறப் பாதிரி விடவும், திருவில் விலங்கன்றித் தீம்ப்ெயல் தாழவும் தொடங்கிய கார்காலத்தில் வருவதாகக் கூறிச் சென்ற தலைமகனின் வரவினைக் காணாத தலைமகள் தன் நெஞ்சினை அவன்பாற் போக்கி நிறையழிந்து வருந்து கின்றவள் இவ்வாறு தன் கொழுநன் சொல்லைத் தவறிய தாம் எனக் கூறித் தன்னைத் தானே தேற்றியும், கழலும் வளைகளைக் கழலாமல் திருத்தியும், மீண்டும் மயங்கியும் நெட்டுயிர்த்தும்,அம்பு பாய்ந்த மஞ்ஞையைப் போல் மயங்கி தன்னக நெகிழ இடஞ்சிறந்துயரிய எழுநிலை மாடத்தின் கண்ணே இருந்து முடங்கிறைச் சொரிதரும் மாத்திரம் அருவியின் ஒசையிலே மனம் பறி கொடுத்து நிற்கின்றாள். இன்றுயில் வதியுநற் காணாள் துயருழந்து நெஞ்சாற்றுப் படுத்த நிரைதபு புலம்பொடு நீடுநினைந் தேற்றியும் ஓடுவளை திருத்தியும் மையல் கொண்டு மொய்யென உயிர்த்து