பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/453

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

444 பாடி வீட்டின் அமைப்பு எஞ்சா மண்ணசை காரணமாக வந்த வேந்தன்மேல் தன் வீரத்தை நிலைநாட்டுதற்காகச் சென்ற முல்லைப்பாட்டுத் தலைமகன் அவன் வீரர்களுடன் பகைப்புலத்தில் பாசறை வீட்டில் தங்கியிருந்தமையைக் கூறும் ஆசிரியர் நப்பூதனார் அவர்கள் பாசறை அமைப்பினை, கான்யாறு தழிஇய அகனெடும் புறவின் சேணாறு பிடவமொடு பைம்புதல் எருக்கி வேட்டுப்புழை யருப்பம் மாட்டிக் காட்ட இடுமுட் புரிசை ஏழற வளைஇப் படுநீர்ப் புணரியிற் பரந்த பாடி - முல்லை 24 28 என விளக்குகின்றார். அதாவது காட்டாறு சூழ்ந்த அகன்ற நெடிய காட்டிடத்தே, சேய்ண்மக் கண்ணும் சென்று மணம் வீசுகின்ற பிடவஞ் செடிகளையும், பசிய துறுகளையும் வெட்டி வீழ்த்திப் பின்னர் ஆங்குக் காவலாக அமைந்திருந்த வேடுவர்களில் குடியிருப்புக்களையும் அழித்துக் கடல்போல் பரந்த பாடிவீட்டினை அமைத்தனர் என அப்பாடி வீட்டின் அமைப்பினைத் தெளிவுறுத்துகின்றார். இன்துயில் வதியுநற் கானாள் நெஞ்சாற்றுப்படுத்த நிரைதபு புலம்பொடு எண்ணியன பெருமுது பெண்டிர் பெரும்பெயல் பொழிந்த சிறுபுன்மாலை போதில் விரிச்சி கேட்டு ஆய்மகன் கூறிய நன்மொழிகளைக் காட்டவும், காட்டவும் காணாதாளாய்க் கலுழ்சிறந்து பூப்போல் உண்கண் புலம்புமுத்துறைப்ப நின்ற தலைமகள் அரசிருந்து பனிக்கும் முரசு முழங்கு பாசறையில் இன்துயில் வதியுநனாய தலைமகனைக் காணாது வருந்துகின்றனள். வருந்துகின்ற தன் நெஞ்சினை அவள்பாற் போக்கி நிறையழிந்து மிக்க துன்பத்தினால் ஒடுகின்ற வளையைத் திருத்திக் கொண்டும், மையல் கொண்டு உயிர்த்தும், பகழி பாய்ந்து மஞ்ஞையினைப் போல் நடுங்கி