பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

篮党受 தொல்காப்பியம் டிவு. தோடே மடலே ஓலை என்றா ஏடே இதழே பானை என்றா ஈர்க்கே குலையே நேர்ந்தன. பிறவும் புல்லோடு வருமெனச் சொல்லினர் புலவர். இளம்பூரணம் : (இ-ஸ்) தோடு முதலாகச் சொல்லப்பட்ட உறுப்பின் பெயரெல்லாம் புல்லாகிய உறுப்பின்கண்ணே வருமென்றவாறு, இதனானே புறவயிர்ப்பும் உள்வயிர்ப்புமில்லாதனவற்றுள் ஒரு சாரண இவ்வகைப்பட்ட உறுப்புப்பெயருடையனவாகி இவை யும் புல்லெனப்படும் என்றவாறு. அவையாவன : வாழை ஈந்து தாமரை கழுநீர் என்றித் தொடக்கத்தன. பேராசிரியம் : இது, முறையானே புறக்காழனவற்றுறுப்பினைச் சொல் லும் மரபுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) எண்ணப்பட்ட வாய்பாடும் பிறவும் புல்லுறுப் பினைச் சொல்லும் வாய்பாடு (எ-று) பிறவு மென்றதனாற் குரும்பை நுங்கு நுகும்பு போந்தை யென்றற் றொடக்கத்தனவுங் கொள்க. "இரும்பனை வெண்டோடு 2மிலைந்தோ னல்லன் (புறம்:45, எனவும், இ இச்சூத்திரம் புறத்தே வயிரமுடைய தெங்கு பனை முதலிய வற்றின் உறுப்புக்களின் மரபுப் பெயர்களை உணர்த்து கின்றது. 1. நுகும்பு - மடல் விரியாத குருத்து. புறம் - 249 - ஆம்பாடல் உரை நோக்குக. போந்தை - கருக்கு. 2. தாலப் புல்லின் வால்வெண் டோட்டு : புறக்கா ழனவே புல்லெனமொழிப' என்றாராகலின்புல்லென்றார் (சிவப்-16) என்றார் அடியார்க்கு நல்லார். $ $ இரும்பனம் போந்தைத் தோடும் தோடே மடலே' எனலும சூத்திரத்துப் பிறவும்' என்றதனால் போந்தை' முடித்தாம்' (பொருநராற்றுப்படை. --143) என்றார் நச்சி னார்க்கினியரும்.