பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரபியல் 盖墨器 வினையென்பன இருவினை இன் நீக்கத்துக்கண் வந்தது : 'விளங்கிய அறி'லென்பது முழுதும் உணரும் உணர்ச்சி. அறிவி, னென நின்றஇன் சாரியை. இன்ன அறிவினொடுகூடிய முனைவன் அறிவின் முனைவனெனப்படும். முன்னோனை முனைவனென் பது ஒர்சொல் விழுக்காடாம் முன்னென்பதனை முனையென்ப வாகலின், மற்று வினையி னென்ற வேற்றுமை, நிற்பதன் நிலையும் நீங்குவதன் நீக்கமுங் கூறுமாகலின் ஒருகாலத்து வினையின்க 1. త్థ நீங்கி, அன்பூழி ,鹽 7, ಖ್ಖನ್ತಿ! இன்’ என்பது, இருளின் நீங்கி என்றாற்போல, வினைக் கண் நிற்பதன் நிலையும் வினையை விட்டு நீங்குவதன் நீக்க மும் கூறும். எனவே, முனைவனாகிய இறைவனை ஒரு காலத்து வினைத் தொடர்புடையனா க் கட்டுப்பட்டிருந்து, ஒரு காலத்து அவ்வினைப் பிணிப்பினின்றும் விடுபட்டு நீங்கி னான் போலக்கூறுவது பொருத்துமா என்பது இங்குக் கேட்கப்படும் வினாவாகும். முனைவனாகிய இறைவன் வினைத் தொடர் பிற்குக் காரணமாகத் தனக்கென ஒரு பொருளை விரும்புதலும், ஒன்றனை வேண்டா என வெறுத் தலுமாகிய விருப்பு வெறுப்புகள் உடையன் அல்லன் என் பதே வினையின் நீங்கி விளங்கிய ...... முனைவன், என்ப, தற்குரியகருத்தாகும். அம்முதல்வனுக்கு உலகெலாம் படைத்துக் காத்த ஒடுக்குதல் முதலிய செயல்கள் உள்ளன என்பது கடவுட் கொள்கை யுடையார் பலர்க்கும் உடம்பாடாகவின்,தனக்கேயுரிய அருளின் வழிப்பட்ட செயல்களாகிய அவ்வினைக் கண் ஈடுபட்டிருக் கும் நிலையிலேயே அவ்வினையினாலடைதற்குரிய போக நுகர்ச்சியும் அத்துகர்ச்சி பற்றியுளவாம் விருப்பு வெறுப்புக் களாகிய வினைத்தொடர்பும் தன்னைப் பற்றாது விலகும் படி பிறப்பிறப்பில்லாப் பெற்றியனாகத் திகழ்வோன் இறை வன் ஆதலின், அம்முதல்வனை வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன்' எனக் கூறியது அமைவுடையதே என் பதும், தம்பாலுள்ள குற்றங்களை நீக்கி முழுதுனர் ஞானம் பெற்ற தவச்செல்வர்களும், நீக்குதற்குரிய குற்றங்கள் எவையு மின்றி இயல்பாகவே முழுதுணரும் மெய்யுணர்வுடையோ ரும் பிறர்க்கு உறுதி பயத்தல் கருதி நூல் செய்வாராயின் அத்தகைய நல்வினை பற்றித் துறக்கம் முதலிய வினைப் பயன்களை அன்னோர் துய்ப்பதில்லை என்பதும், எனவே அன்னேர் வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன் எனவே போற்றத்தக்கவர் என்பதும் மேற் குறித்த வினா வுக்கும் பேராசிரியர் கூறும் விடையாகும்.