பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரபிகல் 霞奪3 கoஉ. மேற்கினந் தெடுத்த யாப்பினுட் பொருளொடு சில்வகை எழுத்தின் செய்யுட் டாகிச் சொல்லுங் காலை உரையகத் தடக்கி துண்மையொடு புணர்ந்த ஒண்மைத் தாகித் துளக்கல் ஆகாத் துனைமை யெய்தி அளக்கல் ஆகா அரும்பொருட் டாகிப் பல்வகை பானும் பயன் தெரி புடையது சூத்திரத் தியல்பென யாத்தனர் புலவர். என்னுதலிற்றோ எனின், நூற்கு அங்கமாகிய சூத்திரத் திலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மேல் தொகுத்தல் விரித்தல் தொகைவிரி மொழி பெயர்த்து அதர்ப்பட யாத்தல் என நால்வகையினும் சொல்லப் பட்ட பொருளோடு, சிலவெழுத்தினான் இயன்ற செய்யுட்டாகி உரைக்குங் காலத்து அவ்வுரையிற் பொருளெல்லாம் தன்னகத் தடக்கி, நுண்ணிய பொருண்மையொடு பொந்திய விளக்கமுடைத் தாகி, கெடுக்கலாகாத துணைச்சூத்திரங்களை யுடைத்தாகி வரையறுக்கப்படாத அரிய பொருளையுடைத்தாகிப் பலவாற்றா னும் பயனை யாராய்தல் உடையது சூத்திரம் எனக் கூறினார் புலவர் என்றவாறு. அளக்கலாகா அரும்பொருளாவது பலமுகத்தானும் பொருள் கொள்ளக்கிடத்தல். - செய்யுளியலுள், சூத்திரந் தானே ஆடிநிழலின் அறியத் தோன்றி நாடுத லின்றிப் பொருள் நனி விளங்கி யாப்பினுள் தோன்றயாத்தமைப் பதுவே. (செய்யுளியல். கசுe) என்பதுTஉம் இதற்கிலக்கணம். இது, நிறுத்தமுறையானே சூத்திரமாமா றுணர்த்துதல் துதலிற்று. (இ-ள்.) மேற் கிளந்து எடுத்த யாப்பின் உட்பொருளோடு