器艺 தொல்காப்பியம் யுடனே ஆண் பன்றி ஒடித்திரிய' என உரை வரைந்த நச்சினார்க் கினியர். பின என்னும் அகர வீற்றுச் சொல் வகரவுடம்படுமெய் பெற்றது; "பன்றி புல்வாய் நாயென மூன்றும், ஒன்றிய வென்ப பினவென் பெயர்க்கொடை' (தொல்-மரபு-58) என்றார் என இச்சூத்திரத்தை மேற்கோளாகக் காட்டியுள்ளார். அவர் கருத்துப் படி இத்தொடரிற் பெண் பன்றியைக் குறித்த இளமைபற்றிய, மரபுப்பெயர் பிண என்னும் அகரவீற்றுச் சொல் எனக் கொள்ள வேண்டும்.எனினும் பெண்ணும் பிணாவும் பிள்ளையும் அவையே என்னும் சூத்திரத்தில் பினா என்னும் ஆகாரவிறுதி (வருமொழி) வன்கணமன்மையின் குறியதன் இறுதிசினைகெட்டு உகரம்பெறாது நின்றது' எனப் பேராசிரியர் குறித்துள்ளார். எனவே பெண்மை பற்றிய மரபுப் பெயர்களுள் ஒன்றாகிய பிணா என்பது ஆகார இறுதியாகவும்,குறியதன் இறுதிச் சினைகெட்டுப் பிண’ என அகர இறுதியாகவும், குறியதன் இறுதிச் சினைகெட்டு உகரம் பெற்றுப் 'பினைவு என உகர இறுதியாகவும் நிற்கும் என்பது பெற்றாம். (டுக) சுரு. பினவல் எனினும் அவற்றின் மேற்றே. இளம்பூரணம் : (இ-ள்) பின வல்1 என்று சொல்லினும் மேற்சொல்லப் பட்டவற்றின் மேல என்றவாறு. (இ-ள்) பினவல் என்பது உம் அம்மூன்றற்கும்? உரித்து. 'இரியற் பினவற்றிண்டலின்’ (அகம் : 21) என்பது பன்றி. 'நான்முலைப் பினவல் சொவியக் கானொழிந்து' (அகம் : 248) என்பதுவும் அது; ஒழிந்தனவும் அன்ன. ஆய்வுரை : (இ-ன்) பினவல் என்ற பெண்மைப் பெயரும் மேற்குறித்த பன்றி, புல்வாய், நாய் என்னும் அம்மூன்றிற்கும் உரியதாகும். எ-து. (& o) 1. பினவல் என்பது பெண்மை பற்றிய மரபுப் பெயர். 2. அம் மூன்றற்கும்-பன்றி, புல்வாய், தாய் என மேற்குறித்த மூன்றினுக்கும், பினவல் என்னும் பெயர் உரியதாகும்.