பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

&受上 தொல்காப்பியம் - பொருளதிகாரம்

உள்ளத்தனாவாள் தலைவனேயாதலின், அதனை முற்படப் பிறந்த அன்பு முறைபற்றி ஒருதலைக் காமமாகிய கைக்கிளை யென்றார். இராக்கதம் வலிதின் மணஞ்செய்தலாதலின் அதுவும் அப்பாற்படும்; பேயும் அப்பாற்படும். இவை முன்னைய மூன்றுங் கைக்கிளையாய வாறு. காமஞ் சாலா இளமையோள் வயிற்’ (தொல்-பொ-50) கைக் கிளை சிறப்புடைத் தென்றற்குப் புல்லித்தோன்றும்’ (தொல்-பொப் 50) எனக் கூறி, இதனை வாளாது குறிப் பென்றார். ஆண்டுபிற்காலத்தன்றிக் காட்சிக்கண் மணம் அதற்கின்மையின் ஈண்டு மணங் கூறும்வழிக் கூறாது அகத்திணையியலுட் கூறினார். ஏறிய மடன்மா’ முதலியவற்றைப் பெருந்திணைக் குறிப்பே' (தொல்பொ-51) எனக் கூறி, ஈண்டும் பெருந்திண்ை பெறுமே யென்றார். அவை சிறப்பில; இவை சிறப்புடைய வென்றற்கு.

இந் நான்கும் ஒருதலைக் காமம்பற்றி நிகழாமையானும் ஒருவனோடொருத்தியை எதிர்நிறீஇ அவருடம்பாட்டோடு புணர்க்குங் கந்தருவ மன்மையானும் அவற்றின் வேறாகிய பெருந்தினை யாம். (14) ஆய்வுரை - -

இது, மேற்கூறியவற்றுள் கைக்கிணைப்பாற்படுவன இவை யென்கிறது ---

(இ-ள்.) மேற்கூறப்பட்ட நிமித்தம் பன்னிரண்டனுள் முற்கூறப்பட்ட காட்சி, ஐயம், துணிவு என்பன மூன்றும் அன்பினைந்திணைக்குரியவாதலே யன்றி ஒருதலைக் காமமாகிய கைக்கிளைக்குரிய குறிப்புக்களாகவும் அமையும் எ-று. (செ)

இது. பெருந்தினைப்பாற்படுவன இவை யென்கின்றது. (இ-ள்.) மேற்குறித்தவற்றுள் நோக்குவவெல்லாம் அவையே போறல், மறத்தல், மயக்கம், சாக்காடு எனப் பின்னர்க் கூறிய நிலைகளும் ஒத்த அன்பால் நிகழும்வழி அன்பினைந்திணையாதலேயன்றி ஒவ்வாக் காமத்தால் திகழும்வழிப் பெருந்திணைக்குரிய பொருத்தாநிலைகளாகவும் கொள்ளப்பெறும் எ-து. (டுை) சுெ. முதலொடு புணர்ந்த யாழோர் மேன

தவலருஞ் சிறப்பின் ஐக்கிலம் பெறுமே. இளம் பூசணம் -

என்- எனின், மேற்சொல்லப்பட்ட ஒருதலைக் காமமும் பொருந்தாக் காமமுமன்றி, ஒத்த அன்பின் வருங் கூட்டம் உணர்த்துதல் துதலிற்று.