உகல் தொல்காப்பியம்-பொருளதிகாரம்
9. உரைத்துழிக் கூட்டம். இவை எட்டும் குறையுறவுணர்தலின்
பாற்படும்.
10. வந்த கிழவனை மாயஞ் செப்பிப் பொறுத்த காரணம் குறித்தல்: இஃது இருவரும் உள்வழி அவன் வரவுணர்தலின் பாற்படும்.
11. புணர்ந்தபின் அவன்வயின் வணங்கல்.
12. குறைந்து அவட்படர்தல்: அஃதாவது குறைநயப்பச் சேறல்.
13. தன்னொடும் அவளொடும் முன்னம் முன்தளை இப் பின்னிலை நிகழும் பல்வேறு மருங்கு: அஃதாவது குறைநயப்புவகை.
14. நன்னயம்பெற்றுழி நயம்புரி இடம்: அஃதாவது தலைமகள் குறை
நயந்தமை தலைவனுக்குக் கூறல்.
15. எண்ணரும் பல்நகை கண்ணிய வகை: அஃதாவது அலராகு
மென்று கூறுதல்.
18. தலைவன் புணர்ச்சி வேண்டிய நிலை,
17. புணர்ச்சி வேண்டாது பிரிவு வேண்டிய நிலை.
18. வேளாண்பெருநெறி வேண்டிய நிலை.
19. புணர்ந்துழியுணர்ந்த அறிமடச் சிறப்பு: அஃதாவது அல்ல.
குறிப்படுதல்.
20. ஒம்படைக் கிளவி,
21. செங்கடுமொழியால் அன்பு தலையடுத்த வன்புறை: அஃதாவது
தலைவனை இயற்பழித்துத் தலைமகளை வற்புறுத்தல்,
22. ஆறின்னாமை அறிவுறுகலக்கம்: அதாவது தலைவன் வரும்
வழி பல்வேறு தீமைகளையுடையது என்றல்.
29. காப்பின்மிகுதி கையறவுரைத்தல்: அஃதாவது தலைமகளைப் பெற்றோர் இற்செறித்துக் காக்கும் காவல்மிகுதியினைக் கூறுதல்.
24. களனும் பொழுதும் வரைநிலை விலக்கிக் காதல் மிகுதி கூறல்