9–岛、 தொல்காப்பியம் -பொருளதிகாரம்
னானுங் கழங்கினானுந் தெய்வத்திற்குச் சிறப்புச் செய்யாக்கால் இம் மையல் திராதென்று கூறுதலின், அவ்விருவருந் தம்மினொத்த திறம்பற்றியதனையே செய்யுஞ் செய்தியிட்த்தும் :
"திறம்’ என்றதனான் அவர் வேறு வேறாகவுங் கூறப்படும்.
st) ற று ற
உ-ம்: பெய்ம்மணன் முற்றங் கவின்பெற இயற்றி
மலைவான் கோட்ட சினை இய வேலன் கழங்கினா னறிகுவ தென்றால் நன்றா லம்ம நின்றவிவ னலனே.” (ஐங்குறு.248)
இது வேலன் கழங்கு பார்த்தமை கூறிற்று.
'அறியா மையின் வெறியென மயங்கி
அன்னையு மருந்துய ருழந்தனள் அதனால் எய்யாது விடுதலோ கொடிதே நிரையிதழ் ஆய்மல ருண்கண் பசப்பச் சேய் மலை நாடன் செய்த நோயே..' (ஐங்குறு.242)
இது வெறியென அன்னை மயங்கினமை கூறிற்று.
罗
‘' அணங்குடை நெடுவரை' என்னும் (22) அகப்பாட்டி லுட் கட்டுக்கண்டு வெறியெடுத்தமை கூறிற்று. 'பனிவரை நிவந்த” என்னும் (38) அகப்பாட்டினுட் பிரப்புளர் பிரீஇ எனக் கட்டு விச்சியைக் கேட்டவாறும், "என் மகட்கு’ எனச் செவிலி கூற்று நிகழ்ந்தவாறுங் காண்க. இதனுள் நெடுவே ணல்குவ னெனினே எனத் தலைவி அஞ்சவேண்டியது, இருவரும் ஒட்டிக்
கூறாமல் தெய்வந்தான் அருளுமென்று கோடலின்.
'இகுளை கேட்டிசின் காதலந் தோழி
குவளை யுண்கண் டேன் பணி மல்க வறிதியான் வருந்திய செல்லற் கன்னை பிறிதொன்று கடுத்தன ளாகி வேம்பின் வெறிகொள் பாசிலை நிலமொடு சூடி யுடலுநர்க் கடந்த கடலந் தானைத் திருந்திலை நெடுவேற் றென்னவன் பொதியில் அருஞ்சிமை யிழிதரு மார்த்துவர லருவியிற் றதும்புசீ ரின்னியங் கறங்கக் கைதெ ழு