பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயற்கைப் புணர்ச்சி - 79 முன்னிலை பாக்கம் சொல்வழிப் படுத்தல் கன்னடம் உரைத்தல் நகைகனி உறாஅ அங்கிலை யறிதல் மெலிவுவிளக் குறுத்தல் தன்னிலை யுரைத்தல் தெளிவகப் படுத்தலென்று இன்னவை நிகழும் என்மனார் புலவர்.28 என்று தொகுத்துக் கூறுவர். இவற்றுள் முன்னிலையாக்கல் என்பது, முன்னிலையாகாத வண்டு கெஞ்சு முதலியவற்றை முன்னிலையாக்கிக் கோடல். சொல்வழிப்படுத்தலாவது, தான் சொல்லுகின்ற சொல்லின் வழி அவள் கிற்குமாறு படுத்துக் கூறுதல். நன்னயம் உரைத்தலாவது, மேற்கூறிய வண்டு முதலியன சொல்லுவனவாக அவற்றிற்குத் தன் கழிபெருங் காதல் கூறுவானாய்த் தன்னயப்பு உணர்த்துதல், நகை கனி உறாஅது அங்கிலை அறிதலாவது, தலைமகன் தன் கன்னயம் உரைத்தலைக் கேட்ட தலைவிக்கு இயல்பாக அகத்து உளவாகும் மகிழ்வால் புறக் தோன்றும் முறுவற் குறிப்பு மிக்குத் தோன்றா அங்கிலையினைத் தலைவன் அறிதல், மெலிவு விளக்குறுத்தலாவது, தலைவன் அகத்துறும் நோயால் புறத்து நிகழும் தளர்வினைக் குறிப்பான் எடுத்துக் கூறல். தன்னிலையுரைத்தலாவது, தன்னுள்ளத்து வேட்கைமீதுரத்தலை நிலைப்படச் சொல்லுதல். தெளிவு அகப் படுத்தலாவது, தலைமகள் உள்ளப்பண்பினைத் தான் அறிந்த தெளிவினைத் தன் மனத்தகத்தே தேர்ந்து வெளிப்படுத்தல், இவை ஏழும் இயற்கைப்புணர்ச்சிக்கு முன்னர் நிகழும் உரையாடல் வகை களாம் என்பது ஆசிரியர் கருத்து. இவற்றிற்கு உரையாசிரியர்கள் காட்டும் பாடல்கள் இவற்றைத் தெளிவாக விளக்கும். இதற்குமேல் இயற்கைப்புணர்ச்சிய ாகிய மெய்புறு புணர்ச்சி கிகழத் தொடங்குவதற்கு முன்னும் சில நிகழ்ச்சிகள் கிகழும். அவற்றை ஆசிரியர், - மெய்தொட்டுப் பயிறல் பொப்பா ராட்டல் இடம்பெற்றுத் தழாஅல் இடையூறு கிளத்தல் டுேகினைந் திரங்கல் கூடுத 29 منه 5 متنقي என்று தொகுத்துக் கூறுவர். மெய் தொட்டுப் பயிறலாவது: தலைவியின் மெய்யைத் தீண்டிப் பழகுதல். கச்சினார்க்கினியர் புலையன் தீம்பால் போல் மனம் கொள்ளுதலும் கொள்ள மையுமாகித் தலைவி கிற்கின்ற காலத்தே தொட்டான் என்பர். 28. களவியல் -10 (இளம்) 29. களவியல் - 11 (இளம்).