பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* {34 தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை శ్లో: இறையனார் கருத்து இரவுக்குறியே இல்வரை இகவாது என்று இரவுக்குறியை உணர்த்தி மேலும் சில கூறுவர். அவையும் இல்வதைப்பகததே நிகழும் என்பது குறிப்பு. அதன் உரை" யாசிரியரும், "அட்டில், கொட்டகாரம், பண்டக சாலை, கூடகாசம், பள்ளியம்பலம், உரிமையிடம், கூத்தப்பள்ளி என இவற்றுள் நீங்கி, செய்குன்றும் இளமரக்காவும் பூம்பக்தரும் விளையாட்டிடமும் அவற்றைச் சாக்தனவற்றுள்ளும் பிறவற்றுள்ளும் ஆக என்றவாறு. எனவே, பகற்குறியிடம் போல வேறுபட்டது ஆகற்க இரவிற். குறியீடம் என்றவாறு, அஃதேயெனின், மனையகத்து ஆக அழிவதுண்டே எனின், குரவர்கள் உறையும் இடமாதலின் தெய்வத்தானம் என்று கருதப்படும். அல்லது உம், புகவும் போகவும் அருமையுடைமையாகலானும் ஆகாது என்பது” என்று விளக்குவர். பகற்குறி தானே இகப்பினும் வரையார்’ என்று அவ்வாசிரியர் பகற்குறி கூறியதையும் உரையாசிரியர், “இகத்தல் என்பது. ஒன்றின் இதத்தல்...பலவாதல் என்றவாறு. ஒரு ஞான்று: வேங்கைப் பொதும்பினுள் ஆம் : ஒரு ஞான்று கோங்கம் பொதும்பினுள் ஆம், குறிஞ்சி நிலமாயின், ஒரு ஞான்று புன்னை உங்கானலுள் ஆம் ஒரு ஞான்று கைதையங்கானலுள் ஆம். நெய்தல் நிலமாயின்’ என்து விளக்குவர். மேற்கூறிய இருவகைக் குறியிடங்களிலும் தலைமகள் கற்புடைய மகளிர்க்குரிய சிறப்பிற். குன்காதவாது தலைவனோடு கூடியொழுகுவாள் என்பர் ஆசிரியர். இது அவர் கூறிய, ஆங்காங் கொழுகும் ஒழுக்கமும் உண்டே ஓங்கிய சிறப்பின் ஒருசிறை யான. என்ற நூற்பாவினால் பெறப்படும். மேற்கூறிய இருவகைக் குறிகளுள் இரவுக்குறியில் தலைவன் வருமிடத்துப் பற்பல அடையாளங்கள் தலைவனால் நிகழ்த்தப் பெறும். அவை புனலொலிப்படுத்தல், புள்ளெழுப்புதல் முதலியன. இங்கனம் தலைவனால் தன் வரவுணர்த்தற்கு மேறகொள்ளப் பெறும் குறிகள் வேறு வகையாலும் கிகழ்வதுண்டு. எடுத்துக் காட்டாக, புன்னைக்காய் மூக்கு ஊழ்ததியதாலும், வளி எறி வதாலும், புள் துளக்குவதாலும் விழுந்து புனலொலிப்படுத்தும். அங்ஙனமே புள் எழுதலும், வெருவுவதாலும், வேற்றுப் புள் வருதலாலும் கிகழ்வதுண்டு. இவற்றைத் தலைவி தலைவன் 21. இறைய கள. நூற். 19, 21. 32. களவியல் - நூற்பா 44 இளம்.)