பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேலும் சில அகத்தினை மரபுகள் 1 .இ கானுசறும். பதிற்றுப்பத்தும் ஒழிய ஏனைய ஆறும, பதினெண்கீழ்க் கணக்கு நூல்களில் சிலவும், பத்துப்பாட்டில் சிலவும் அகத்திணை பற்றி அமைந்த நூல்களேயாகும். இவற்றுள் கற்றிணை முதலிய தொகை நூல்கள், பல பு ல வ ர் க ள | ல் பாடப்பெற்றவை. அஃதாவது, ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு திணை, துறை விகற்பங்களைப்பற்றிப் புலவர்கள் பாடிப்போந்த செய்யுள்கள் பிற். காலத்தொருவரால் தொகுக்கப்பெற்று முறைப்படி கோக்கப் பெற்றன. இங்ஙனம் அகப்பொருளைப் பொருளாகக் கொண்டு. தம்மை ஆதரித்த அரசர், செல்வர் முதலியவர்களைப் பாட்டுடைத் தலைவராக்கிப் பாடும் வழக்கு முன்னாளில் தமிழ் மக்களால் பெரிதும் மதிக்கப்பெற்று வந்தது. ஒவ்வொரு திணையின் முதல், கரு, உர்ப்பொருள்களின் இயற்கைச் சிறப்புகளை எடுத்து விளக்கி அழகாகப் பாடிவந்த அருமைபற்றிப் பண்டைப்புலவர்களில் சிலர் பாலை பாடிய பெருங்கடுங்கோ, பாலைக் கெளதமனார், மருதனிள நாகனார், நெய்தற் கார்க்கியன், வெறி பாடிய காமக் கண்ணியார், மடல் பாடிய மாதங்கீரன் என்று அகத்திணைத் துறைப்பெயர்களால் சிறப்பித்து வழங்கப்பெறுவாராயினர். மேலும், பண்டைக்காலத்தில் பொருளிலக்கணத்தை அறிந்திராமை பெரியதோ இழுக்காகவும் கருதபபெற்று வந்தது. கடைச்சங்க காளில் ஒரு காலத்தே பொருளிலக்கணமறிந்த புலவர் கிடையாமற். பாண்டியன் புடைபடக் கவன்ற போது, "என்னை? எழுத்தும் சொல்லும் ஆராய்வது பொருளதிகாரத்தின் பொருட்டன்றே: பொருளதிகாரம் பெறேமே எனின் இவை பெற்றும் பெற்றிலேம்’ என அவ்வரசன் கூறினதாகவுள்ள வரலாற்றால் இதனை அறிய லாம். அன்றியும், இறையனார் அருளிச்செய்த பொருளிலக்கணத் திற்குப் புலவரைக் கொண்டு பொருளறிந்த வரலாறு பொருளா ராய்ச்சியில் முன்னோர்க்கிருந்த ஊக்கமிகுதியைப் புலப்படுத்தும். பொருளதிகாரத்தில் கூறப்பெறுஞ் செய்தி தமிழ் மொழிக்கே சிறப்பாகவுடையது. இதன் பொருட்டே ஆரிய அரசன் பிரகததனும் தமிழறிய விரும்பினான். கபிலர் என்னும் கல்லிசைப் புலவர் "குறிஞ்சிப் பாட்டு' என்ற ஒர் அழகான பாட்டினைப் பாடி அவனுக்குத் தமிழின் நீர்மையினை உணர்த்தினார். இவனே 50. இம்முறை பிற்காலததில் (அண்மைக் காலத்தில், சிற்றிலக்கியங்களாக வடிவெடுக்கும் பொழுது சில: நூல்கள் நாகரிகமற்ற முறையில் மிகவும் கீழ்த்தரமாகப் பாடப் பெற்றுள்ளன. - - 51. இறை. . களவியல்-நூற்பா ! - இன் உரை. 52. பத்துப்பாட்டில் ஒன்று.