பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ア会。 தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை மிகுதி. ஐயமிகுதலாவது, மக்களுள்ளாள் அல்லள் தெய்வமோ என மேலாயினாரோடே ஐயுறுதல். சிறந்துழி என்பதற்குத் தலைமகள் தான் சிறந்துழியும் கொள்ளப்படும் , அவளைக் கண்ட இடம் ஐயப்படுதற்குச் சிறந்துழியும் கொள்ளப்படும் ; உருவமிகுதி யுடையளாதலின் ஆயத்தாரிடைக் காணினும் தெய்வம் என்று: ஐயுறுதல். இதனாற்சொல்லியது, உலகத்துத் தலைமகனும் தலைமகளுமாக நம்மால் வேண்டப்பட்டார் அந்தணர் முதலாய கான்கு வருணத்தினும் ஆயர் வேட்டுவர் குறவர் பரதவர் என்னும் தொடக்கத்தினும் அக்குலத்தாராகிய குறுநில மன்னர்மாட்டும் உளராவான்றே; அவரெல்லாரினும் செல்வத்தானும் குலத்தானும் வடிவானும் உயர்ந்த தலைமகனும் தலைமகளுமாயினோர்மாட்டே ஐயம் நிகழ்வது. அல்லாதார் மாட்டும் அவ் இழிமரபினையே சுட்டி நிற்குமாதலான் என்றவாறு" என்ற உரைப்பகுதியைப் படித்து உளங் கொள்க. தலைவன் கண்ட தலைவி காமப்பருவம் அடையா திருப்பின் தலைவன் குறிப்புக்கு எதிர்க்குறிப்பு நிகழாது. அஃது ஒருதலைக் காமமாகிய கைக்கிளைக் குறிப்பின்பாற்படும். ே அதனால் தலைவன் கொண்ட ஐயத்தினால் யாதொரு பயனும் இல்லை. எனவே, தலைமகள் காமப்பருவத்தாளாயிருந்தால்தான் தலைவியின் குறிப்புக்கு எதிர்க்குறிப்பு நிகழ்த்துவாள். தலைவன் மாட்டு கிகழும் ஐயமும் சிறந்து தோன்றும். இதனையே மேற் குறிப்பிட்ட களவியல் நூற்பா (தற்பா-3) குறிப்பிடுகின்றது. இங்ஙனம் ஐயப்படுபவன் தலைமகனே என்பது தொல்காப்பியரின் கருத்தாகும். இதனை, . உயர்மொழிக் கிளவி உறழுங் கிளவி ஐயக் கிளவி ஆடுஉவிற் குரித்தே. ' என்று விதியும் கூறுவர், தலைவி தன்னினும் உயர்ந்த தலைவனை கோக்கி இவன் தெய்வமோ ? மகனோ ?’ என்று ஐயுற்றால் அவன் உள்ளத்தில் அச்சம் தோன்றுமேயன்றிக் காமவுணர்வு தோன்றாது என்று இதனை விளக்குவர் இளம்பூரணர். மேற்கூறியவாறு தலைமகன் விண்ணவர்க்கன்றி மண்ண வர்க்கேயுரிய குறிகள் சில தலைவியிடம் நிகழ்தல் கண்டு ஐயம் நீங்குதல் தெளிதல்' எனப்பெறும். தெளிதல்-உண்மையுணர்தல், இதனைத் துணிவு என்றும் வழங்குவர். சீவகன் பதுமையை இன்னாளெனத் தெளிந்ததைத் திருத்தக்க தேவர், . 15. களவியல் - 3-ஆம் நூற்பாவின் உரை. 16. அகத்திணை - நூற்பா 50 (இளம்) 17. பொருளியல் - நூற்பா 42 (இளம்)