பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 அவரிவ ருவரென வரூஉம் பெயரும் யான் யாம் நாமென வரூஉம் பெயரும் யாவன் யாவள் யாவ ரென்னும் ஆவயின் மூன்ருே டப்பதி னேந்தும் பாலறி வந்த உயர் திணைப் பெயரே. இஃது உயர்தினைப் பெயர்களுட் சிலவற்றை எடுத்துரைக் கின்றது. (இ-ள்) மூவகையால் மேற்சொல்லப்பட்ட பெயருள் அவன், இவன், உவன்; அவள், இவள், உவள்; அவர், இவர்' உவர்; யான், யாம், நாம்; யா வன், யாவள், யாவர் என் னும் இப்பதினைந்தும் பால் விளங்க நிற்கும் உயர்திணைப் பெயர் களாகும். எ-று. இவற்றுள் யான் என்பது ஒருவன் ஒருத்தி யென்னும் பாலுணர்த்தாதாயினும் உயர்திணையொருமை உணர்த்தலின் பாலறிவந்த பெயராம். ள சுங். ஆண்மை யடுத்த மகனென் கிளவியும் பெண்மை யடுத்த மகளென் கிளவியும் புெண்மை யடுத்த விகர விறுதியும் நம்மூர்ந்து வரூஉம் இகரவை காரமும் முறைமை சுட்டா மகனு மகளும் மாந்தர் மக்கள் என்னும் பெயரும் ஆடூஉ மகடூஉ வாயிரு கிளவியுஞ் சுட்டுமுத லாகிய அன்னும் ஆனும் அவைமுத லாகிய பெண்டென் கிளவியும் ஒப்பொடு வரூஉங் கிளவியொடு தொகைஇ அப்பதி னேந்தும் அவற்ருேரன்ன. இதுவும் அது. (இ-ள்) இப்பெயர் பதினைந்தும் மேற்க்கூறப்பட்டன போல இன்னபால் என அறியவந்த உயர்திணைப் பெயர்களாம். எ-று ,