பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 கும் பெயர்; பட்டி புத்திரர், கங்கை மாத்திரர் முதலியன. இவை ஆடல் குறித்து இளையோர் பகுதிப்படக் கூடிய வழியல் லது வழங்கப்படாமையிற் குழுவின் பெயரின் வேருயின. குழு வின் பெயர் ஒரு துறைக்கண் உரிமைபூண்ட பல்லோர்மேல் எக்காலத்தும் வழங்குவன. இன்றிவர் என்னும் எண்ணியற் பெயர்-இத்துணையர் என வரையறை யுணரநின்ற எண்ணுகிய இயல்புபற்றி வழங்கும் பெயர்; ஒருவர், இருவர், மூவர், முப்பத்துமூவர் முதலியன. இன்றிவர்-இத்துணையர் என்னும் பொருளது. அன்றியனைத்தும்-அவ்வனைத்தும். ஒரு நிமித்தம் பற்றிச் சேறலிற் பலபெயர் ஒரு பெயராக அடக்கப்பட்டமையான், நிலப்பெயர் முதலாயினவற்றை வேறு கூறினர்?’ என்பர் சேவைரையர், ளசுகள். அன்ன பிறவும் உயர்தினே மருங்கிற் பன்மையும் ஒருமையும் பாலறி வந்த என்ன பெயரும் அத்திணே யவ்வே. இஃது உயர்திணைப் பெயர்க்குப் புறனடை கூறுகின்றது. (இ-ள்) மேற் சொல்லப்பட்ட பெயர் போல்வன பிறவும் உயர்திணேக்கண்ணே பன்மையும் ஒருமையுமாகிய பாலறிய வந்த எல்லாப் பெயரும் உயர்திணைப் பெயராம். எ-று. ஆண்பால், பெண்பால், பலர்பால் என்னும் முப்பாலறிய வந்த என்னது, பன்மையும் ஒருமையும் பாலறிவந்த: என்ருர்; யான் என்பது முதலிய ஒருமைப் பாலுணர்த்தும் பெயர்களும் அடங்குதற்கு. அன்ன பிறவுமாவன-ஏனதி, காவிதி, எட்டி, வாயிலான், பூயிலான், வண்ணத்தான், சுண்ணத்தான், பிறன், பிறள் ,