பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திணையியல் நூற்பா உக உசுதி

வகையினையும் இவையென அடுத்து வரும் நூற்பாக்களில் விரித்துக் கூறியுள்ளார் எனக் கொள்ளுதலே தொல்காப்பிய நூற் போக்குக்கு ஏற்புடையதாகும்.

21. அமரர்கண் முடியும் அறுவகை யானும் புனைதீர் காமம் புல்லிய வகையினும் ஒன்றன் பகுதி ஒன்றும் என்ப. இளம் : இது, பாடாண் பாட்டிற்கு உரியதொரு பொருண்மை உணர்த்துதல் நுதலிற்று.

(இ ள்) அமரர்கண் முடியும் அறுவகையானும்-அமரர்கண் முடியும் கொடிநிலை கந்தழி வள்ளி புலவராற்றுப் படை புகழ்தல் பரவல் என்பனவற்றினும்.

புரைதீர் காமம் புல்லிய வகையினும்-குற்றந் தீர்ந்த காமத் தைப் பொருந்திய வகையினும்.

அஃதாவது, ஐந்திணை தழுவிய அகம். ஒன்றன் பகுதி ஒன்றும் என்ப - அவையிற்றின் ஒரு கூற்றின் பாகுபாடு பாடாண் திணை யாதற்குப் பொருந்தும் என்பர் புலவர்."

அஃதாவது, கொடிநிலை முதலிய ஆறும் கடவுட் புகழ்ச்சி யின்றிப் பாட்டுடைத் தலைவனைச் சார்த்தி வருதல், காமப்பகுதி யிற் பாடும் பாட்டுடைத் தலைவனைச் சார்த்தி வருதல் என்ற இவ்விருவகையானும் ஒருவனைப் புகழ்தலாற் பாடாண்பாட்டு ஆயிற்று.

இன்னும் புரைதீர் காமம் புல்லிய வகையினும் ஒன்றன்பகுதி' என்ற அதனான் ஐவகைப்பொருளினும் ஊடற்பொருண்மை பாடாண்பகுதிக்கு ஒன்றும் என்றவாறாம். இன்னும் இதனானே இயற்பெயர் சார்த்திவாராது நாடும் ஊரும் இதுவென விளங்க வரும் ஊரன் சேர்ப்பன் என்னும் பெயரினான் ஒரு கூறு குறிப்புப் பற்றி வரும் பகுதியும் பாடாண்பாட்டாம் என்றும் கொள்க."

(2-3)

1. புரை-குற்றம். ஒன்றன் பகுதியாவது, கொடி நிலை, கந்தழி முதலாக வரும் துறைகளில் அவ்வத் துறைகட்குரிய பொருட்பகுதியின் வேறாகப் பாட்டு டைத்தலைவனைச் ச ர்த்தி வரும் புகழ்ச்சிக் கூ றாகிய ஒரு பகுதி. ஒன்றும்பொருந்தும்.

2. கொடி நிலை, கந்தழி, வள்ளி, புலவராற்றுப்படை, புகழ்தல், பரவல் எனத் தேவர் கண்ணே வந்து முடியும் இவ்வறு வகைகளினும், குற்றந்தீர்ந்த காமத் தைப் பொருந்திய வகையினும் அமைந்த பாடல்களில் முறையே தெய்வ வாழ்த்துப்

பகுதியும் அகப்பொருட்பகுதியும் இடம்பெறுதல் இயல்பாதலின், அப்பொருட் பகுதிக்கு வேறாக பாட்டுடைத்தலைவனைச் சார்த் தி வரும் ஒருபகுதியே