பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/387

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 தொல்காப்பியம் நுதலிய பொருள் வழக்கதிகாரம் எனவும் வேருென்று கூறுதல் வேண்டுமாத லானும், எழுத்துஞ் சொல்லும் பொருளும் என மூன்றற்கும் முன்றதிகாரமாக்கி அதிகாரம் ஒன்றற்கு ஒன்பது இயல்களாக ஆசிரியர் நூல்செய்த முறையோடு மாறுகொள்ளுமாதலானும் அது பொருந்தாதென மறுப்பர் பேராசிரியர். மாத்திரை, எழுத்தியல், அசைவகை, சீர், அடி, யாப்பு, மரபு, தூக்கு, தொடைவகை, நோக்கு, பா, அளவியல், திணை, கைகோள், கூற்றுவகை, கேட்போர், களன், காலவகை, பயன், மெய்ப்பாடு, எச்சவகை, முன்னம், பொருள், துறைவகை, மாடடு, வண்ணம் எனவரும் யாப்பிலக்கணப் பகுதியாகிய இருபத்தாறும், அம்மை, அழகு, தொன்மை, தோல், விருந்து இயைபு, புலன், இழைபு எனவரும் வனப்பு எட்டுமாக இங்குக் கூறப்பட்ட முப்பத்து நான்கும் நல்லிசைப் புலவர் கூறும் செய் யுளுக்கு உறுப்பாம் என இவ்வியல் முதற்துத்திரம் கூறும். இதன் கண் மாத்திரை முதல் வண்ணம் ஈருக முற்கூறப்பட்ட இருபத் தாறும் தனிநிலைச் செய்யுட்கு இன்றியமையாதனவாய் வரும் உறுப்புக்கள் எனவும், பிற்கூறப்பட்ட அம்மை முதலிய எண்வகை வனப்புக்களும் தனிநிலைச் செய்யுள் பல தொடர்ந்தமைந்த தொடர்நிலைக்கே பெரும்பான்மையும் உறுப்பாயும் தனிநிலைக்கண் ஒரோவென்ருயும் வருவன எனவும் பேராசிரியர் நச்சினர்க் கினியர் உரைப் பகுதிகளால் நன்குணரலாம். செய்யுளுக்குரிய உறுப்புக்கள் எல்லாவற்றையுந்தொகுத்துக் கூறுவதாகிய இச்சூத்திரத்தில் தளேயென்பது தனியுறுப்பாகக் குறிக்கப்படவில்லை. தளையாவது, நின்றசீரின் ஈற்றசையுடன் வருஞ்சீரின் முதலசை ஒன்றியும் ஒன்ருமலும் வர இருசீர்கள் தம்முள் தளத்து (கட்டப்படடு) நிற்றல். சீரது தொழிலாகிய இத்தளையைச் செய்யுளுக்குரிய தனியுறுப்பாகக் கொள்ளாது, சீராலாகிய அடியின் அமைப்பாகவேகொண்டு இலக்கணங் கூறுவர் தொல்காப்பியர். இவ்வாறன்றிச் சிறுகாக்கை பாடினி