பக்கம்:தொழில் வளம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முன்னுரை

13


தொழில் வளர்க்கப் பெறுகின்றது. இத்துறையில் பரந்த இந்திய நாட்டு முயற்சியில் தமிழ்நாட்டின் பங்கு பெரிது.

தமிழ்நாட்டில் தனியாரும் அரசாங்கமும் உரிமை பெறு முன்பும் பெற்றபின்பும் பலவகையில் தொழில்களை வளர்த்து வருவதைக் காண்கின்றோம். சென்னை, கோவை, மதுரை முதலிய பெருநகரங்கள் இத்தகைய தொழில் வளத்தால் மிக விரைவில் வளர்ந்து உயர்ந்து வருவதைக் காண்கின்றோம். அப்படியே சிறு சிறு நகரங்களிலும்—ஏன் ? கிராமங்களிலும் கூடடப் பல புதுப் புதுத் தொழில்கள் வளர்க்கப்பெறுகின்றன. அவற்றைத் திறம்பட நடத்தவும் நன்கு தொழிற்படுத்தவும் தக்க பொறியாளரும் வல்லுநர்களும் இல்லாத குறையைப் போக்க நாட்டில் பொறியியற் கல்லூரிகளும் பல்கலைத் தொழிற் பள்ளிகளும் நாள்தோறும் வளர்ந்து வருவதைக் காண்கின்றோம். எண்ணற்ற தொழிற் பள்ளிகளிலும் பொறியியற் கல்லூரிகளிலும் பயிலும் மாணவர் தற்போது வேலை தேடித் திரியும் தொல்லையின்றி தேர்வு முடித்ததுமே பல்வேறு தொழில் துறைகளில் அமர்த்தப்பெறுகின்றனர். அரசாங்கப் பொருளுதவியும் அவ்வத் துறையில் வல்லவர் மேற்பார்வையும் பொருந்த நாட்டில் வளரும் தொழில்கள் அளவில. அவற்றையெல்லாம் அளவிட்டு எழுத முடியாது.

நாட்டின் பல பகுதிகளிலும் சுற்றிவந்த எனக்கு அங்கங்குள்ள தொழில்வள மாறுபாட்டைக் காண, இந் நூலை எழுத வேண்டும் என்ற எண்ணம் உண்டாயிற்று. எனினும் தமிழ் இலக்கியத்தோடும் வரலாற்றோடும் பண்பாட்டுடனும் என் உறவை அமைத்துக் கொண்டு அமைதியாக ஒரு மூலையில் முடங்கிக் கிடக்கும் என்னால் இப்பணியைச் செய்யமுடியுமா என்ற எண்ணமும் என் உள்ளத்தில் எழுந்தது. அதே வேளையில் தமிழ் இலக்கியம் பாடிய பழங்காலப் புலவர்கள் இலக்கியத்துக்கிடையிடையே அக்காலத் தமிழ்நாட்டின் தொழில் வளத்தையும் காட்டிக் கொண்டே சென்ற சிறப்பும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/16&oldid=1381936" இலிருந்து மீள்விக்கப்பட்டது