பக்கம்:தொழில் வளம்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

160

தொழில் வளம்


வந்துள்ளது என்பதை நாடு உணர வேண்டும். எனவே, அரசாங்கத்தார் இயற்கை மூலப் பொருள்கள இல்லை என்று குறைபட்டுப் பல்வேறு தொழில்களை நிறுத்தாது மக்கள் தொழில் மூலத்தை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு தொழில்களை ஆரம்பிக்க வாய்ப்பு இருக்கின்றது. மூலப் பொருள்களைக் கொண்டு வரும் செலவு அதிகமாகி அதனால் உற்பத்திப் பொருள்கள் விலை ஏறிவிடும் எனவும் அஞ்ச வேண்டியதில்லை. இந்தியா முழுவதிலும் தமிழ் நாட்டில்தான் மக்கள் தங்கள் தொழிலுக்காகப் பெறும் ஊதியம் மிகக் குறைந்த அளவில் உள்ளதை யாவரும் அறிவர். அந்த அடிப்படையில் அனைத்திந்திய ரெயில்வேயில் அமைந்துள்ள சம்பள ஏற்றத்தாழ்வு, இன்றும் நம் நாட்டில் உள்ளதை யாவரும் அறிவர். எனவே, இவர் தம் உழைப்பு. முதலீடு பொருள் வருத்தும் முதலீட்டைச் சரி செய்வதோடு இவர்தம் முயற்சி பொருள்களைப் பெருமளவில் உற்பத்தி செய்யவும் உதவும்.

தொழில் வளர்ச்சிக்கு மற்றொரு இன்றியமையாத அடிப்படை பொருள். அரசாங்கம் மக்கள் அடிப்படையிலோ மூலப் பொருள் அடிப்படையிலோ அன்றி வேறு அடிப்படைகளிலோ இந்த நாட்டுத் தொழில்களையும் அவற்றின் ஆக்க வளர்ச்சிகளையும் பிறவற்றையும் உறுப்பு நாடுகளுக்கிடையில் பகிர்ந்து கொடுக்கின்றது. அந்த அளவைப் பெருக்க வேண்டுமென ஒவ்வொரு திட்டக்காலத்திலும் தமிழ்நாட்டு அரசாங்கம் மத்திய அரசாங்கத்தை மன்றாடிக் கேட்டுக் கொண்டபோதிலும், இந்த அரசாங்கம் கேட்ட அளவில் என்றும் மத்திய அரசாங்கம் பொருளை ஒதுக்கவில்லை. என்பதை நேரில் கண்டுவருகிறோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/163&oldid=1382043" இலிருந்து மீள்விக்கப்பட்டது