பக்கம்:தொழில் வளம்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

166

தொழில் வளம்


இருவரும் ஒருவரை ஒருவர் உள்ளத்தால் புரிந்து கொண்டு, ஒருவர் மற்றவருக்கு உதவி, அதனால் தத்தம் வருவாயினையும் வளத்தையும் பெருக்கிக் கொள்வதோடு நாட்டுப் பெருளாதார வளத்தையும் வளர்த்து வாழவைக்கின்றனர். அதனாலேயே சில ஆண்டுகளுக்கு முன் நாட்டில் அதிகமாக இருந்த வேலை நிறுத்தம் போன்ற தொல்லைகள் தமிழ்நாட்டில் குறைந்து வருகின்றன. இன்னும் இத்தொழில் அடிப்படையினையும், அவற்றில் பொருள் உழைப்பு இவற்றின் இணைப்பினையும், தனி மனிதரை மறந்து தொழில் துறையில் உள்ள அனைவரும் சமுதாயம் அல்லது நாடு அல்லது உல்கம் என்ற ஒன்றிய உணர்வில் செயலாற்ற வேண்டிய நிலையினையும் விளக்கத்தக்க வகையில் நல்ல கல்வியினை நாடி அவர்களுக்குக் கொடுத்தால்—தொழில் முறை வளர்ச்சிக்குரியவற்றைக் கற்பித்தால்—தமிழ்நாட்டில் இன்னும் தொழில் துறை சிறந்து விளங்கும் என்பது உறுதி.

இனிப் போக்குவரவு பற்றிக் காணலாம். தமிழ் நாட்டின் உயிர் நாடியாகிய உழவுத்தொழிலுக்கும் சரி, பிற சிறுதொழில் பெருந்தொழில்களுக்கும் சரி, போக்குவரவுச் சாதனங்களே முக்கிய இடம் பெறுகின்றன. மக்கள் தத்தம் தொழில் கருதிப் பலவிடங்களுக்குச் செல்லுவதற்கும் தாங்கள் பொருள் விளைப்பதற்கேற்ற மூலப்பொருள்களையும் பிறவற்றையும் வெளியிடங்களிலிருந்து பெறுவதற்கும் விளைந்த அல்லது உற்பத்தி செய்த பொருள்களைச் சந்தைகளுக்குக் கொண்டு சேர்ப்பதற்கும் நல்ல சாலைகளும் பிறபோக்குவரத்துச் சாதனைகளும் தேவையாக உள்ளன! நல்ல சாலைகள், இரெயில் பாதைகள், கப்பல் துறைமுகங்கள் போன்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/169&oldid=1382063" இலிருந்து மீள்விக்கப்பட்டது