பக்கம்:தொழில் வளம்.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மின்சாரமும் தொழில்வளமும்

255


மேலே காட்டியபடி பத்து லட்சம் கி. வா. (9,200,000 KW அரசாங்கக் கணக்குப்படி) கட்டாயம் பெறமுடியும். இத்துணையும் பெற்ற பிறகும் நாட்டின் வளர்ந்துவரும் தொழில் நிலைக்கேற்ப மின்சாரத் தேவையை நிறைவு செய்ய முடியுமா என்ற ஐயம் வளர்ந்து கொண்டே வருகின்றது. ‘அறிதோ றறியாமை கண்டற்றால்’ என்று திருவள்ளுவர் கூறிய உண்மை இன்று நாட்டின் மின்சார வளர்ச்சிக்கும் தொழில் வளர்ச்சிக்கும் பொருந்துவதாகும். அறிய அறியத்தான் நமது அறியாமை மேலும் மேலும் நன்கு நமக்குப் புலப்படுகிறது என்பது அதன் பொருளாகும். இதேநிலையில் தான் நாட்டின் தொழில் வளமும் அதனுடன் இணைந்த மின்சார வளமும் வளர வளரத்தான் பிற உலக நாடுகளை நோக்கவும் நாட்டின் பிற பகுதிகளில் உள்ள இயற்கைச் சூழல், முதலிய சாதனங்களை நோக்கவும் நாம் இன்னும் பல்வேறு துறைகளில் வளம்பெற வேண்டியுள்ளோம் என்பதை உணர முடிகின்றது. நாட்டின் தேவையும் அதற்கேற்ப வளர்ந்துகொண்டே வருகின்றது. தொழில்கள் வளர வளரத்தான் தமிழ் காட்டு மக்கள் ‘இவ்வளர்ச்சி எம்மாத்திரம் ? இன்னும் நாம் எவ்வளவோ வளர வேண்டியுள்ளதே !’ என எண்ணி எண்ணி ஏங்கவேண்டிய நிலை உண்டாகியுள்ளது. அப்படியேதான் நீர் மின்சார நிலையங்களும் தனி ஆக்க மின் நிலையங்களுக்குப் பத்து லட்சம் கி.வா. மேல் கடந்த ஐம்பது ஆண்டு வளர்ச்சியில்-சிறப்பாகப் பதினைந்தாண்டுகளில்-வாரி வழங்கிய போதிலும் ‘இது எம்மாத்திரம்’ எங்கள் தமிழ்நாட்டுத் தொழில் வளர்ச்சிக்கு இன்னும் எவ்வளவோ மின்சாரம் தேவையாகுமே என்று தமிழர் உள்ளங்களிலும் தமிழ்நாட்டு ஆட்சியாளர் உள்ளங்களிலும் உணர்ச்சி உண்டா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/258&oldid=1382068" இலிருந்து மீள்விக்கப்பட்டது