பக்கம்:தொழில் வளம்.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பத்தாண்டுச் சாதனைகள்

281


இந்தியாவுக்கு மேற்குப் பகுதியிலிருந்து கிழக்குப் பக்கம் வரக்கூடிய கப்பல்கள் எல்லாம் இலங்கையைச் சுற்றிக்கொண்டுதான் வரவேண்டியிருக்கிறது. சேது சமுத்திரத் திட்டம் அமைப்பதன்மூலம் இலங்கைக்கும், இந்தியாவுக்கும் மத்தியிலே இருக்கக்கூடிய கடல் வழியாகக் கப்பல்கள் செல்ல ஏற்பாடு செய்ய முடியும். இதைப்பற்றித் திரு. இராமசாமி முதலியார் அவர்களின்கீழ் அமைக்கப்பட்ட குழு முன்பே ஓர் அறிக்கையைத் தந்திருக்கிறது. இத் திட்டம் பற்றிய இறுதியான முடிவு எடுக்குமுன் இன்னும் சில புள்ளி விவரங்கள் தேவையாக இருக்கின்றனவென்பதை உணர்ந்து, மேலும் சில பரிசீலனைகள் இப்போது நடைபெற்று வருகின்றன. திரு. இராசாமி முதலியார் குழுவில் பணியாற்றிய கேப்டன் டேவிஸ் என்ற கடல் துறை நிபுணர் அண்மையில் மறுபடியும் நம் நாட்டுக்கு வந்து, இந்தப் பரிசீலனைகள் நடக்க வேண்டிய முறையை வகுத்துக் கொடுத்துச் சென்றிருக்கிறார். சேது சமுத்திரத் திட்டம் உருவாவதன் மூலமாகத் தான் துரத்துக்குடித் துறைமுக வளர்ச்சியும் நல்ல முறையிலே மேலும் பயன்பட முடியும். நம்முடைய கடலோரக் கப்பல் போக்குவரத்தையும் பெரிய அளவில் வளர்க்க முடியும். ஆகவே சேது சமுத்திரத் திட்த்தை நடைமுறையில் கொண்டு வருவதற்குத் தொடர்ந்து முயற்சிகள் செய்யப்படும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/288&oldid=1381629" இலிருந்து மீள்விக்கப்பட்டது