13. வாணிபமும் தொழில் வளமும்
வாழ்வின் தேவைகளே பொருள் உற்பத்தியைப் பெருக்குகின்றன என்றும் அவ்வுற்பத்திப் பெருக்கமே நாட்டின் தொழில்வளமாக அமைகின்றதென்றும் கண்டோம். வாழ்வுக்குப் பலபொருள் தேவை. அவற்றை உண்டாக்கும் தொழிற்சாலைகள் பல வயலுள் விளையும் உணவுப் பொருள்களும் தொழிற்சாலைகளில் உண்டாகும் பிற பொருள்களும் அவ்வவற்றை விரும்பும் மக்களைச் சென்றடைந்து அவரவர் வாழ்விற்குப் பயன்படுகின்றன. வயலில் விளையும் பொருள்களையும் தொழிற்சாலைகளில் உற்பத்தியாகும் பொருள்களையும் தேவையானவருக்குக் கொண்டு சேர்க்கும் ஒரு தொழிலேயே வாணிபம் என்ற பெயரால் வழங்கி வருகின்றார்கள். சில வேளைகளில் இல்வாணிபம் நேருக்கு நேராக நடப்பதுமுண்டு; சில வேளைகளில் சிலரோ பலரோ உற்பத்திச் சாலைக்கும் பயன் படுத்துவோருக்கும் இடையில் நின்று பணியாற்றுவர். அவர்களையே வணிகர் என அழைக்கின்றாேம். சிறப்பாக வாணிபம்