பக்கம்:தொழில் வளம்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80

தொழில் வளம்


கொண்டே வந்திருக்கிறது; இனியும் முயன்று வரும் என்பதில் ஐயமில்லை. எத்தனை குறைபாடுகளிருந்தாலும் தமிழ்நாட்டு அரசாங்கம் செய்யும் பெருமுயற்சிகளாலே அடுத்த இரண்டு ஐந்தாண்டுத் திட்டங்களில் தமிழ்நாடு தொழில் துறையில் மிக உயர்ந்த நிலையில் முன்னேறும் என்பது உறுதி. நல்ல அரசாங்க ஊழியர்கள் எத்தகைய திட்டத்தையும் அயராது அயிர்க்காது, ஓயாது ஒழியாது நிறைவேற்றித் தர அல்லும்பகலும் தயாராக உள்ளனர். ‘உலகெங்கணும் எங்கெங்கு உழைப்பு உண்டோ அங்கெல் லாம் தமிழரைக் காணலாம்’ என்று ‘கால்டுவெல்’ அன்று சொன்ன சொல் இன்றும் உண்மையாகவே உள்ளது. எனவே தமிழ்நாட்டு அரசாங்கம் தமக்குரிய உரிமையைப் பற்றி அதிகமாக வாதாடிப் பொருளையும் பிறவற்றையும் வாங்கித் தருவது உறுதி. ஊழியர்களும் மக்களும், அவர்கள் பின்னின்று எந்தத் திட்டத்தையும் இடரினும் தளரினும் அஞ்சாது முன்னேறி நிறைவேற்றி வைப்பார்கள் என்பதும் உறுதி. தமிழ்நாட்டுக்கு வேண்டிய மின்சாரம், பாசனம், போக்குவரவுச்சாலை, மூலப்பொருள் செல்வ வளன், பிறநாட்டு இயந்திரம் முதலிய அடிப்படைத் தேவைக்குரியவற்றை அயராது நமது அரசாங்கத்தார் கேட்டு வாங்கித்தந்துகொண்டே இருப்பின் அவருடன் தோளோடு தோள்சேர்ந்து தமிழ்ச் சமுதாயம் சாதி சமய நீதி நிற பிற எல்லா வேறுபாடுகளையும் மறந்து முன்னேற்றப் பாதைக்கு இயைந்து செல்லும் என்பது உறுதி. மலேயா, இலங்கை, பர்மா, தென்னாப்பிரிக்கா, பிஜித் தீவுகள் ஆகிய வெளிநாடுகளுக்கெல்லாம் தலைமுறை தலைமுறையாகச் சென்று சென்று பாடுபட்டுத் தம் வாழ்வையும் இரத்தத்தையும் சிந்திச் சிந்தி அந்தந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/83&oldid=1381448" இலிருந்து மீள்விக்கப்பட்டது