பக்கம்:தோழி நல்ல தோழிதான்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

156 ★ வல்லிக்கண்ணன்


“பேசாமல் திரும்பிப் போ,” என்று உறுமினான் மற்றவன்.

சிவகுருவுக்கு உள்ளுற பயம் பிடித்துக் கொண்டது. வாய் திறவாது நின்றார்.

“இந்தா பையை புடி!” பtசை மட்டும் வைத்துக் கொண்டு இதர சாமான்களுடன் பையை அவர் கையில் திணித்தான் முரடன்.

“என் பர்ஸ்!” தீனமாக ஒலித்தது சிவகுருவின் குரல்.

“பர்ஸ் . ஹூவ்... பர்ஸ்...!” என்று கூறி ஒரு தினுசாக சிரித்தான் தடியன். நோட்டுகளை எடுத்துக் கொண்டு பர்சை அவரிடம் நீட்டினான்.

“பணம்... என் பணம்...” என்று இறைஞ்சினார் சிவகுரு.

“போ... போ... இங்கே நிற்காதே!” என்று மிரட்டினான் முரடன்.

“பஸ்சுக்கு கூட பணம் இல்லியே!” அழுவது போல் சொன்னார் ஆவர்.

“சரிதாம் போடா,” என்று அவரைப் பிடித்து தள்ளினான் தடியன். சி“ல்லறை காசுகள் இருக்குல்லா அது போதும்,” என்று கூறி சிரித்தான்.

“திரும்பிப் பாராமல் போ... இல்லேன்னா, உதை வாங்குவே!” உறுமல்கள் தொடர்ந்தன.

சிவகுரு பயந்து போய் நடந்தார். வேகமாகவே நடந்தார். ஒரு கவரில் சில ரூபாய் நோட்டுகளை வைத்து, சட்டையின் உள் பையில் பத்திரப்படுத்தி இருந்தார் அவர். ஆகவே, பயணம் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை என்று தன்னைத்தானே தேற்றிக் கொண்டபடி நடந்தார் சிவகுரு.

★ தினமலர் தீபாவளி மலர் 1995