பக்கம்:தோழி நல்ல தோழிதான்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தோழி நல்ல தோழிதான் ★ 19


“எல்லாம் விதிப்படிதான் நடக்கும். அதை எழுதினவன் அழிச்செழுத மாட்டான்” என்றாள் கிழவி.

இரண்டு பேரும் சேர்ந்து குடிசைக்குள் போனார்கள். தங்களுக்குப் பழக்கமான பொருட்களை, இடத்தை, சூழ்நிலையை எல்லாம் வேதனையோடு உற்று நோக்கினார்கள். ஒருவர் முகத்தை ஒருவர் வெகு நேரம் பார்த்துக் கொண்டே இருந்தார்கள்.

அவர்களுடைய கைகள் ஒரு சட்டியிலிருந்த தண்ணீரில் ஒரு பொடியைக் கொட்டின. தாராளமாகவே கொட்டின. கலக்கின. அவன் ஈயத்தம்ளரில் அவளுக்கு அதைக் கொடுத்தான்; சட்டியோடு தான் குடித்தான்.

வாழ்க்கையில் வேறு துணை அற்றுப்போன அவ்விருவருக்கும் முடிவில் ‘எலிப் பாஷாணம்’ துணையாக வாய்த்தது.

‘எழில்’ (தூத்துக்குடி) நவம்பர் 1972