பக்கம்:த்வனி-சிறுகதைகள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

፱ Š லா. ச. ராமாமிருதம்

அவள் தங்கை செய்வதெல்லாம் அவள் செய்தாக வேண்டும். -

"ஒரு அசலாத்துப் பெண்ணைக் கழுத்தில் கயிற்றைக் கட்டி இழுத்துண்டு வந்துட்டா ஆயிடுத்தா ? அவளைச் சந்தோஷமா வெச்சுக்க வேண்டாமா ?”

'உங்க அம்மாவுக்குக் காரும், சினிமாவும்தான் முக்கியம். நான் கூட இல்லே ” என்று நான் கேலி செய்தால் அதற்கும் பதில் வைத்திருப்பாள்.

'அப்படித்தான் இருந்துட்டுப் போகட்டுமே ! ஊர் உலகத்தில் எல்லோரும் போகல்லியா, வரல்லியா ? ஆம்படையான் செத்துப்போனவாள் எல்லாம் உடனே உடன்கட்டை ஏறிவிட்டாளா ? நீங்கள் ஒரு பிள்ளை. உங்களை நம்பி உங்கம்மா வாழ்ந்தாப்போலே, நான் மூணு பேரை நம்பி வாழ்ந்திட்டுப் போறேன். மூணு பேரில் மூணுபேருமா பொல்லாதவனாயிருப்பான்கள் ? உங்களை நம்பி என்ன கண்டேன்.”

'நான் தான் வெகுளி. லோலோன்னு கத்தி நானே ஒயனும். எல்லாத்துக்கும் மெளனம்தான் மருந்துன்னு உங்கப்பா அழுத்தமாயிருக்கார். எனக்குத் தெரியாதா ? ஆனால் இனி நான் ஒயமாட்டேன்.” எனக்கும்தான் தெரிகிறது. ப்ரேமையின் சின்னமாய் ராதையின் பெயரை இவள் ஏன் கொண்டாள்? -

இதெல்லாம் இன்றைக்கு எனக்குத் தோன்றுவானேன்? அன்று மாலை, ஏன் அன்றிலிருந்தே நான் வீடு திரும்ப வில்லை. --

ராதையின் புழுக்கமும், அவள் பழியும், என் மெளன. மும் சேர்ந்து நிச்சயமாய் என்னை ஏதோ ஒரு முனைமுகம் இழுத்துச் செல்கின்றன. அவள் கிளை தாவிட்டாள். எனக்குத் தாவக்கிளையில்லை. அதற்குப் பதில் என்னைக் கழுவிலேற்றியது போல் என்னை ஊடுருவிவிட்ட வேர் மீது, என்மீது ஒரு விருசும் வளர்த்து கொண்டிருக்கிறது.