பக்கம்:த்வனி-சிறுகதைகள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த்வனி 45

வெட்கம் கெட்டு, உங்கள் முன்னிலையில் பேசமுடியுமா ? என்னதான் வெளிச்சமாயிருந்தாலும், ஆண் பார்வை என்மேல் படுகையில், கூச்சம் குறுக்கிட்டு விடாதா ? ஆத்ம நிர்வாணத்தைப் புலன்களால் புரிந்துகொள்ள முடியாது அதையும் உடலின் ஆடையுரிப்பாய்த்தான் கண்ணுக்குக் காணத்தெரியும்.”

"வெட்கம் கெட்டதாய்த்தான் மனத்திற்கு நினைக்க முடியும்.’’

'எனக்கென்னவோ இந்த நிலையில் பொய்ம்மை தான் தெரிகிறது.'

'உண்மையும் பொய் போலும்மே பொய்போலிம்மே. நானும் ஏதோ ஒரு யோசனைதான் நடத்துகிறேன்.'

'ஒரு வழியாகச் சொல், நீ விரும்புவதுதான் என்ன ?” 'உங்கள் நினைவில் என் குரல் சதா ஒலித்துக் கொண்டிருக்க விரும்புகிறேன். அந்த ஒலியின் தூண்டலாக உங்கள் எண்ணத்தில் எழும் உருவில், உங்கள் நெஞ்சின் ஒமகுண்டத்தில், அழிவற்ற இளமையில், ஜ்வலித்துக் கொண்டிருக்க விரும்புகிறேன்.'

'எனக்குப் பிடரி சிவிர்த்தது.” 'என்ன குரூரமான ஆசை. எதிராளியின் வேதனை பற்றி நீ கொஞ்சமாவது நினைத்தாயோ ?”

'வாழ்க்கையின் எந்த மகத்தான சம்பவத்தில் குரூரம் இல்லை ? உயிர் பிறக்கையில் தாய்க்கு இரக்கம் பார்க்கி றதா, பார்க்க முடியுமா ? அதேபோல் உயிர் பிரிகையிலும் உடலின் வேதனையை அனுசரிக்கிறதா ? இப்போது நம் மில் நேர்ந்து கொண்டிருப்பது என்னென்று நினைக்கிறீர் கள் ? நம் முதுகுகளைப் பிளந்துகொண்டு நாம் புதிதாய்ப் புறப்பட்டுக் கொண்டிருக்கிறோம் சாகாவரம் அடைவது பின் எப்படி ?’’

Line ctit— அவள் பேச்சின் வேகத்தில், அந்தக் குரலில் கக்கிய ஆவியில் டெலிபோன் புகையாததுதான் ஆச்சரியம்.

என் நெஞ்சில் குயிர்.