பக்கம்:நடந்து கொண்டே இரு-இளைஞர் கவிதைகள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வ.கோ. சண்முகம் அண்ணலே வருக! விசு தணற்புயல் விரல்கள் பட்டொரு வாச மலர்ப்பொழில் வதையுமா றிந்த தேசம் நலியது! திரும கள் நைகிறாள்! பூசை புரிகிறோம்! புகல்தர இன்றும், வா! - மனப் பூட்டுகள் உடைத்திட வா! வா!! பாபம் இழைத்தோம்! பவித்ரம் பூண்டிலோம்! தீபம் இழந்தோம்! திசைகளும் காண்கிலோம்! சாபம் மிதிக்குது! சழக்குகள் மிஞ்சின! தாபம் மிகுந்தோம்! தயாளனே! இன்றும் வா! - உனது தரும நிழலைத் தா! தா!!