பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4




அபூ பக்கர்-செல்வாக்குள்ள குறைஷி குடும்பத்தில் பிறந்தவர். பெருமானார் அவர்களுக்கு மூன்று வயது இளையவர். எப்பொழுதும் பெருமானாருடனேயே இணைந்து இருந்தவர். பெருமானார் இறைவனுடைய தூதர் என்பதில் உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தார். துணிவுள்ளவர். இஸ்லாத்துக்காக, அவர் அனுபவித்த துன்பங்கள் பல. தம் உயிரையே இழக்கத் தயாரானவர். ஆயிஷா நாச்சியாரின் தந்தையார். தங்களுக்குப் பிறகு இஸ்லாமிய அரசின் தலைவராக இருக்குமாறு பெருமானார் தேர்ந்தெடுத்த பெருமை பெற்றவர். இவர்கள் வசித்த இடம் மதீனாப் பள்ளியுடன் இணைக்கப்பட்டு, “இது அபூபக்கர் வீடு’ என அரபியில் எழுதப்பட்டுள்ளது. இவர்கள் 63-வது வயதில் உயிர் நீத்தார்கள்.

அபூ லஹப்-அப்துல் முத்தலியின் மகன். பெருமானார் அவர்களுக்குப் பெரிய தந்தை. செல்வந்தர். கல் நெஞ்சம் உடையவர். பெருமானார் அவர்களை இழித்தும், பழித்தும் கூறி எதிர்த்து வந்தார். அவருடைய மனைவியும் அவ்வாறே நடந்து, இறுதியில் வறுமையில் வாடி இறந்தார். அபூலஹபும் தொற்று நோயால் இறந்தார். இவருடைய மக்கள் எவரும் இவரை அடக்கம் செய்ய முன்வரவில்லை.

அபூ ஜந்தல்-இவர் சுஹைல் இப்னு அப்ருவின் மகன். குறைஷிகளின் கொடுமை தாளாமல், ஹுதைபிய்யா உடன்படிக்கையின் போது பெருமானார் அவர்களிடம் ஓடி வந்தார். பிறகு அவர் தந்தையிடமே, அவர் ஒப்புவிக்கப்பட்டார்.

அபூ ஜஹ்லு-மக்ஸூம் கோத்திரத்தில் பிறந்தவன். இஸ்லாத்துக்கும், நாயகம் அவர்களுக்கும் பல கொடுமைகள் புரிந்தவன். பத்ருப் போரில் வெட்டி வீழ்த்தப்பட்டான். இவனுடைய சகோதரர் ஹாரித், பெருமானார் அவர்களின் தோழர்களில் ஒருவராக இருந்தார். இவன் மகன் இக்ரிமா பின்னர் இஸ்லாத்தைத் தழுவி, இஸ்லாத்துக்காகப் போர் புரிந்தார்.

அபூ ஸுப்யான்-பனூ ஹாஷிம்களுக்கு விரோதமான உமையா கோத்திரத்தில் பிறந்தவர். பத்ருப் போருக்குப் பின்