பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

7



அவர்களுக்கு அன்ஸாரிகள்-உதவியாளர்கள் எனப் பெயர் வழங்கலாயிற்று.

அனஸ் இப்னு மாலிக்-இவர் மதீனாவின் கஸ்ரஜ் கோத்திரத்தில் பிறந்தவர். இவருடைய தந்தை, இவரை நர்யகம் அவர்களிடம் ஒப்படைத்தார். பத்து ஆண்டுகள் வரை ஊழியத்தில் இருந்து, பல போர்களில் கலந்து கொண்டார்.103 வயது வரை வாழ்ந்தார்.

ஆயிஷா-அபூபக்கர் அவர்களின் மகளார். கதீஜாப் பிராட்டியாரின் பிரிவுக்குப் பின் பெருமானார் அவர்களுக்குத் தொண்டு புரிவதற்காக, அபூபக்கர் தம் மகளைத் திருமணம் செய்து கொடுத்தார்கள்.

இக்ரிமா-இவர் இஸ்லாத்தின் பரம விரோதியான அபூஜஹ்லின் மகன். இவரும் தந்தையைப் போலவே விரோதியாகவே இருந்தார். பத்ருப் போரில் முஸ்லிம்களை எதிர்த்தவர். மக்கா வெற்றியின் போது தப்பி ஓடியவரை, இவர் மனைவி அழைத்து வந்து, பெருமானாரிடம் மன்னிப்புப் பெறச் செய்தார். இக்ரிமா இப்னு அபீஜஹ்ல் என்னும் பெயரால் இவரை அழைப்பதை, இவர் விரும்பவில்லை. பின்னர் இவர் யர்மூக் போரில் வீர மரணம் அடைந்தார்.

இப்னு முகைறா-வலீத் இப்னு முகைறா. இவர் மக்காவில் பிரபலமான மக்ஸூம் கோத்திரத்தில் பிறந்தவர். செல்வமும், செல்வாக்கும் பெற்றவர் இவர். “பெருமானார் சிறந்த நாவன்மை மிக்கவர்” என்று கூறினார். இவருடைய தலைமையில் குறைஷிகள் கூடித்தான் அவர்களைப் பற்றி வெளியூரார் கேட்டால் என்ன கூறுவது என்று முடிவு செய்தனர். இவருடைய பத்து மக்களில் காலித், வலித், ஹிஷாம் ஆகிய மூவரே இஸ்லாத்தைத் தழுவினர்.

உத்பா இப்னு ரபீ ஆ-குவைஷித் தலைவர்களில் ஒருவர். இவருடைய மகள் ஹிந்தாவை அபூஸூப்யான் மணமுடித்திருந்தார். இவருடைய மகன் ஹூதைபா இஸ்லாத்தைத் தழுவியிருந்தார். இவர் குறைஷிகளின் சார்பாக, பெருமானார் அவர்களிடம் சென்று, பொருள், புகழ், பேண