பக்கம்:நபிகள் நாயகம் வழியில்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ՅՅ நபிகள் நாயகம் வழியில் பேரும் புகழும் பெற்ற மருத்துவர்களால்; தீர்க்க முடியாத நோய்களையும் மன குழப்பங்களையும் உடைய அந்த மக்கள் சுல்த்தான் செய்யது இபுறாகிம் அவர்கள் பேரிலும்; இறைவனது நம்பிக்கையிலும், ஏர்வாடிக்கு வந்து செல்வது, வீண் பிரயத்தனம் அல்ல என்பதையும் விந்தை மிக அற்புதம் என்பதையும் இத்தகைய மக்களது. பலவேறு அனுபவங்கள். தெற்றனத் தெளிவாக்குகிறது. மனித சமுதாயம் அன்பாலும், இறை நம்பிக்கையாலும். ஜாதி, இன, மத பேத மற்ற நல்லுணர்வுகளாலும், தொடர்ந்து விளங்குவதற்கு. சுல்த்தான் அவர்களது சன்னிதானம், மிகச்சிறந்த எடுத்துக் காட்டாக இருந்து வருகிறது.