பக்கம்:நபிகள் நாயகம் வழியில்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1ՅՑ 11 12 13 14 15 16 17 நபிகள் நாயகம் வழியில் நேசமுடன் கரம் பிடித்து நேர்வழி காட்டி நேரமெல்லாம் இறை நினைவின் இன்பமுதுாட்டி நேர்மையுடன் ஆண்ட மகா அரசுயர் நாட்டி நேயமுயர் ஸய்யிதிப்ராஹீம் குத்புல்லாஹ் மாமுயர் சன்மார்க்கமதை வளம் பெறச்செய்தோர் மாந்தர்களை இறை வழியில் மாண்புறச் செய்தோர் மாநபியின் குணங்களினால் மணம் பொதிந்துயர்ந்தோர் மான்மிய முயர் ஸய்யிதிப்ராஹீம் குத்புல்லாஹ் வான் மழைபோல் ஞானமிர்தத் தேன்.மழை பொழிந்து வாசமிகும் பண்புகளால் பூ மணம் பொழிந்து வாழ்ந்த மகானின் வரவால் வையக மகிழ்ந்து வாழ்த்து மெங்கள் ஸய்யிதிப்ராஹீம் குத்புல்லாஹ் சீர்பெருகிய சிறப்பிடமாய்ச் சிறந்த குணாளர் சித்தமதில் உத்தமராய் தெளிந்த தயாளர் சிந்தை தனில் நட்புயர்ந்த நற்செயலாளர் சிறப்புகளுயர் ஸய்யிதிப்ராஹீம் குத்புல்லாஹ் இறை நினைவில் இவர்கள் நிதம் இன்பமடைந்து இருள் படர்ந்த இதயங்களில் இறையொளி சொரிந்து இட்டமுடன் இறைவழியில் இன்னுயிர் துறந்து இடமுயர்ந்த ஸய்யிதிப்ராஹீம் குத்புல்லாஹ் ஏர்வாடி ஒலிநாயக மென்றேற்றி புகழ்வோம் ஏங்கி வரும் மாந்தர்களின் ஏந்தலைப் புகழ்வோம் ஏற்றமிகும் நல்வரம் யாம் பெற்று மகிழ்வோம் மின் ஹள்ரத்திஹறி ஸய்யிதிப்ராஹீம் குத்புல்லாஹ் அன்பு நிறைந்தோர்களுக்கு அண்ணலின் வாசம் அரும் மருந்தாம் பிணிகளுக்கு மிகப்பிரமாதம்