பக்கம்:நபிகள் நாயகம் வழியில்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

S.M. கமால் 25 நாயகம் அவர்களுக்குத் தீங்கு செய்யத் தயங்கினர். அவர்களைச் சார்ந்து நின்றவர்களுக்கும் பலவிதமான இடர்ப்பாடுகளை ஏற்படுத்தினர். அவர்கள் மக்கா நகரில் தொடர்ந்து வாழ முடியாத சூழ்நிலையை உண்டாக்கினர். உறவினர்களாகிய உதுமான் போன்றவர்கள் நாயகம் அவர்களின் அனுமதி பெற்றுச் செங்கடலைக் கடந்து மேற்கே உள்ள அபிசினியா நாட்டு மன்னரிடம் புகலிடம் புகுந்தனர். சிலகாலம் கழித்து நாயகம் அவர்களது உயிருக்கே உலை வைக்கவும் திட்டமிட்டனர். இத்தகைய சிந்தனைகள் இளைஞர் சுல்த்தான் செய்யது இப்ராஹீமின் மனத்தில் தொடர்ந்து நிழலாடி வந்தன.