பக்கம்:நபிகள் நாயகம் வழியில்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல் - ? தின்மார்க்கத்தைப் பரப்பும் பணியில் விரைவிலேயே அரேபிய நாட்டிற்கு கிழக்கே உள்ள சிந்து நாட்டிற்குத் தமது தோழர்களுடன் சென்றார்கள். தமது ஏக இறைக் கொள்கை வழியாக அந்தப் பகுதிகளின் குடிகளாக வாழ்ந்து வந்தவர்களை மனமாற்றம் அடையச் செய்தார்கள். இந்த முயற்சியில் பெற்ற அனுபவத்தையும் வெற்றியையும் கொண்டு அண்மையி லிருந்த குஜராத் மாநிலத்திற்கும் சென்றார்கள். பலநூறு ஆண்டு களாகப் பொருத்தமற்ற பழக்க வழக்கங்களாலும். பகுத்தறிவுக்கு ஒவ்வாத சமயச் சடங்குகளாலும் தங்களது வாழ்க்கையினை நரகமாக்கிக் கொண்டிருந்த அம்மக்கள் அனைவரையும் தங்கள் புதிய சிந்தனையில் ஒன்றுபடச் செய்தார்கள். ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் என்று உயர் கொள்கையின் நுட்பொருளை அவர்கள் உணர்ந்து புரிந்து கொள்ளுமாறும் செய்தார்கள். அனைவரையும் தங்கள் புதிய சிந்தனையினால் ஒன்றுபடச் செய்தார்கள். மதுப் பழக்கத்தையும், சமுதாய வாழ்க்கையையும், சமுதாய ஏற்றத் தாழ்வுகளையும் பிறப்பால் உரிமை கொண்டாடிய மேல் ஜாதி, கீழ் சாதி என்ற பாகுபாடுகளையும் அறிவார்ந்த வணக்க வழிபாடுகளுக்கு அப்பாற்பட்ட சிலை வணக்கங்களையும். விழாக்களையும் விட்டொழிக்கச் செய்தார்கள்.